பதிவு செய்த நாள்
06 ஏப்2012
00:06
திருச்சி: திருச்சி "பெல்' நிறுவனம், 2011-12ம் ஆண்டில் 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கு வர்த்தம் செய்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 46 சதவீதம் அதிகம். 2010-11ம் ஆண்டில் 3,253 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது. இது, 2011-12ம் ஆண்டில் 3,120 கோடி ரூபாயாக உள்ளது.தொடர்ந்து 43 ஆண்டாக, திருச்சி "பெல்' நிறுவனம் லாபம் ஈட்டி வருகிறது. "பெல்' குழுமத்தின் மொத்த லாபத்தில், திருச்சி "பெல்' நிறுவனத்தின் பங்களிப்பு 31 சதவீதம். நடப்பாண்டில், 17 ஆயிரத்து 251 கோடி ரூபாய்க்கு வர்த்தகமும், 4,166 கோடி ரூபாய் லாபமும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கடந்தாண்டு 6,000 மெகாவாட் ஆக இருந்த உற்பத்தித்திறனை, அடுத்தாண்டில் 11 ஆயிரம் மெகாவாட் ஆக உயர்த்த திட்டமிடபட்டுள்ளது. நாட்டிலேயே முதல்முறையாக, நிலக்கரியை பரிசோதிக்கும், அதிநவீன நிலக்கரி ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்டுள்ளது.உற்பத்தித்திறனை 20 ஆயிரம் மெகாவாட்டாக உயர்த்தமுதலீட்டுத்திட்டங்கள் வகுக்கப்பட்டு, மூன்றாவது விரிவாக்கப்பணிகள் மூலம், 15 ஆயிரம் மெகாவாட் உற்பத்தித்திறன் எட்டப்பட்டுள்ளது. இதற்காக கடந்தாண்டு 239 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|