பதிவு செய்த நாள்
06 ஏப்2012
00:06
புதுடில்லி: கடந்த 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி, 60 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்திருக்கும் என, வேளாண் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (அபெடா) தெரிவித்துள்ளது.கடந்த 2010-11ம் நிதியாண்டில், வேளாண் பொருட்கள் ஏற்றுமதி, 43 ஆயிரத்து 627 கோடி ரூபாயாக இருந்தது. ஆக, முந்தைய நிதியாண்டை விட, சென்ற நிதியாண்டில், இதன் ஏற்றுமதி, 38 சதவீதம் அதிகரித்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேளாண் பொருட்கள் பிரிவில், பழங்கள், காய்கறிகள், பாசுமதி அரிசி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் இடம் பெற்றுள்ளன என, "அபெடா' அமைப்பின் தலைவர் எஸ்.தவே தெரிவித்தார்.இந்நிலையில், மலர்கள், பழங்கள், காய்கறிகள், இறைச்சி, பதப்படுத்தப்பட்ட உணவுகள், தானியங்கள், பயிறு வகைகள், மூலிகை மருந்துகள், மூலிகை தாவரங்கள், கொத்தவரை உள்ளிட்ட, 14 வகை வேளாண் பொருட்களின் ஏற்றுமதி, சென்ற நிதியாண்டில், 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்திருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.இது, கடந்த 2010-11ம் நிதியாண்டு ஏற்றுமதியை விட, 41 சதவீதம் (85 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகமாகும் என, தவே மேலும் கூறினார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|