பதிவு செய்த நாள்
06 ஏப்2012
00:07
சென்னை: மகிந்திரா பவரால், வீடுகள் மற்றும் கடைகளுக்கு தேவையான அதிக திறன் கொண்ட, தடையில்லா மின்சாரம் அளிக்கக்கூடிய யு.பி.எஸ். சாதனங்கள் மற்றும் இன்வர்டர்களுக்கான மின்கலன்களை அறிமுகம் செய்துள்ளது.இது குறித்து இந்நிறுவனத்தின் வர்த்தக பிரிவு தலைவர் பி.பழனியப்பன் கூறியதாவது:வீடுகள், அலுவலகங்கள், பெட்ரோல் மையங்கள், மருத்துவமனைகள், சில்லரை அங்காடிகள் உள்ளிட்டவற்றிற்கு தேவையான, 2.5 கே.வி.ஏ முதல் 5 கே.வி.ஏ திறன் கொண்ட யு.பி.எஸ்.கள் மற்றும் மின்கலன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நீண்ட நேரம் உழைக்கும் வகையில் மேற்கண்ட தயாரிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், மைக்ரோ கன்ட்ரோலர் அடிப்படையிலான வடிவமைப்பு, ஓவர்லோடின் போது ஒலியெழுப்பும் அலாரம், அதிக இரைச்சலின்றி இயங்கும் வசதி ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும்.ஈகோ, ஈகோ ப்ளஸ், ஹை ஸ்பீட் மற்றும் இண்டெலி என 4 வகைகளில் இந்த யு.பி.எஸ். சாதனங்கள் சந்தையில் கிடைக்கும். 2.5 கே.வி.ஏ மற்றும் 5 கே.வி.ஏ. திறன் கொண்ட யு.பி.எஸ். சாதனங்களின் விலை, முறையே 25 ஆயிரம் மற்றும் 35 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இச்சாதனங்கள், குறைந்த பராமரிப்பு செலவில், அதிக மின் ஆற்றல் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பழனியப்பன் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|