பதிவு செய்த நாள்
06 ஏப்2012
00:09
உடுமலை: உடுமலையில், தேங்காய் கொப்பரையை நவீன முறையில் காயவைக்க, ஐந்து இடங்களில் சோலார் உலர் கூடாரம் அமைக்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில், தேசிய வேளாண் வளர்ச்சி நிதியிலிருந்து, சோலார் உலர் கூடாரம் அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதில், உடுமலை வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம், தாராபுரம் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம், ஜல்லிபட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், வீதம்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன்சங்கம் மற்றும் தீபாலபட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் ஐந்து இடங்களில், தலா 6 லட்சம் ரூபாய் செலவில், சோலார் உலர் கூடாரம் அமைக்கப்படுகிறது.இதில், ஜல்லிபட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், பணிகள் நிறைவடைந்து துவக்க விழா நடைபெற்றது. இந்த உலர் கூடாரம் குறித்து கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் ராமமூர்த்தி கூறியதாவது:‹ரிய கூடாரம், 50 அடி நீளம், 10 அடி அகலம், 10 அடி உயரம் என்ற அளவில் அமைப்படுகிறது. இந்த அறையின் @மற்கூரை பாலிதீன் @பார்வை கொண்டு மூடப்படுகிறது. ‹ரிய ஒளி, பாலிதீன் @பார்வை வழியாக கூடாரத்திற்குள் ஊடுருவுகிறது. இதையடுத்து வெளிப்புற வெப்பநிலையை விட, கூடாரத்திற்குள் 15 டிகிரி öŒல்சியஸ் வெப்பம் அதிகமாக கிடைக்கும். இதனால் கூடாரத்தில் வைக்கப்படும் கொப்பரை சீராக உலர்கிறது.உலர் கூடாரத்தில், 7,500 தேங்காய் கொப்பரைகளை, 24 மணி நேரத்தில் உலர வைக்கலாம். மழை, தூசியிலிருந்து 100 சதவீதம் பாதுகாப்பானது. உலர வைக்கும் செலவில், 42 சதவீதம் சேமிப்பு கிடைக்கிறது. உள்வெப்பத்தின் வாயிலாக ஈரப்பதம் கட்டுப்படுத்தப்படுகிறது. இவ்வாறு, ராமமூர்த்தி தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|