தொழிலாளர் சேமநல நிதி வட்டி இந்த நிதியாண்டில் 8.6 சதவீதம்?தொழிலாளர் சேமநல நிதி வட்டி இந்த நிதியாண்டில் 8.6 சதவீதம்? ... மதுரை நகைக்கடைகள் போராட்டம் : 5 நாட்களுக்கு ரூ.280 கோடி இழப்பு மதுரை நகைக்கடைகள் போராட்டம் : 5 நாட்களுக்கு ரூ.280 கோடி இழப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நாளை வங்கிகள் முழு நேரம் இயங்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஏப்
2012
09:58

சென்னை:'தொடர் விடுமுறை காரணமாக, நாளை வங்கிகள் முழு நேரம் இயங்கும்' என, அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆண்டு கணக்கு முடிப்பு, மகாவீரர் ஜெயந்தி மற்றும் புனித வெள்ளி என, இந்த வாரம் மூன்று நாட்கள், வங்கிகளுக்கு விடுமுறை நாட்களாக அமைந்துவிட்டன. இந்த தொடர் விடுமுறையால், வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பை ஓரளவிற்கு ஈடுசெய்ய, நாளை (7ம் தேதி), பொதுத் துறை வங்கிகள் உட்பட அனைத்து வங்கிகளையும் முழுநேரம் இயக்க, வங்கி நிர்வாகங்களை, நிதி அமைச்சகம் பணித்துள்ளது.
இதற்கான அறிவிப்பு ரிசர்வ் வங்கி மூலம், அனைத்து வங்கி நிர்வாகத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.இதுகுறித்து, அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: சனிக்கிழமையில் வழக்கமாக, காலை 10 முதல், மதியம் 2 மணி வரை தான் வங்கிகள் செயல்படும். நாளை மட்டும், தமிழகத்தில் உள்ள பொதுத் துறை வங்கிகள் உட்பட, அனைத்து வங்கிகளும், காலை 10 முதல் மாலை 5 மணி வரை, முழு நேரம் செயல்படும். மதியம் 2 மணி முதல் மாலை 5 வரையிலான பணியை, கூடுதல் நேரமாகக் கருத வேண்டும் என, நிதி அமைச்சகத்தை கோர உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)