பதிவு செய்த நாள்
10 ஏப்2012
10:00
மதுரை: மதுரை ரயில்வே கோட்டம் 2011-12 நிதியாண்டில் கடந்த மார்ச் வரை ரூ.530.15 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்தது. இலக்கு நிர்ணயித்ததை விட 10.19 சதவீதம் இது அதிகம். 2010-11 நிதியாண்டில் இக்கோட்டம் ரூ.433.46 கோடி மட்டும் வருவாய் ஈட்டியது. 2012 மார்ச்சில் மட்டும் ரூ.50.61 கோடி வருவாய் ஈட்டியது. கடந்தாண்டு ரூ.35.42 கோடி ட்டும் வருவாய் ஈட்டியது. சரக்கு போக்குவரத்து மூலம் மட்டும் இந்தாண்டு ரூ.206.38 கோடி வருவாய் ஈட்டியது. கடந்தாண்டு சரக்குகள் மூலம் வருவாய் ரூ.130.03 கோடியாகும். இந்தாண்டு சரக்குகள் மூலம் ரூ.149.76 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 37.81 சதவீதம் அதிகமாக வருவாய் ஈட்டியது. இந்தாண்டு இந்தாண்டு 2.3 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டது. கடந்தாண்டு 1.85 டன் சரக்குகள் கையாளப்பட்டன. இந்நிதியாண்டில் இக்கோட்டம் 1969 சிறப்பு ரயில்களை இயக்கியது. இத்தகவலை பி.ஆர்.ஓ., வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|