பதிவு செய்த நாள்
10 ஏப்2012
12:39
கொச்சி: சென்ற 2011-12ம் நிதியாண்டில் இந்தியாவின் காபி ஏற்றுமதி 17 சதவீதம் உயர்ந்து 3.48 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளதாக முதல் கட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய நாடுகளையே பெரிதும் சார்ந்துள்ள இந்திய காபி ஏற்றுமதி அந்நாடுகளில் நிலவி வந்த பொருளாதார சிக்கல்கள் காரணமாக 10 முதல் 15 சதவீதம் வரை சரிவடையலாம் என எதிர்பார்க்கப்பட்டது. சர்வதேச சந்தையில் காபியின் விலையில் ஏற்பட்ட சரிவும், ஏற்றுமதிக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் விலக்கி கொள்ளப்பட்டதும் காபி ஏற்றுமதியில் பின்னடைவினை ஏற்படுத்தும் என்ற அச்சப்பாட்டை ஏற்படுத்தியது. இந்தநிலையில், கடந்த 2011-12ம் நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் ஏற்றுமதி வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. அமெரிக்க டாலருக்கெதிரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட சரிவும் ஏற்றுமதி மதிப்பினடிப்படையில் அதிகரித்ததற்கு முக்கியமான காரணமாகும். 2010-11 நிதியாண்டில் ஏற்றுமதியான 2.97 லட்சம் டன் காபியே இது வரையிலும் அதிகமான அளவாக இருந்து வந்தது. இந்நிலையில், அராபிக்கா மற்றும் ரோபஸ்டா ஆகிய இரண்டு ரகங்களின் உற்பத்தி சிறப்பாக அதிகரித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|