பதிவு செய்த நாள்
10 ஏப்2012
16:17
கோல்கட்டா: 4ஜி தொழில்நுட்பத்திலான பிராட்பேண்ட் வயர்லெஸ் சேவையை ஏர்டெல் நிறுவனம் முதல்முறையாக இன்று அறிமுகம் செய்தது. அறிமுக விழாவில் மத்திய அமைச்சர் கபில் சிபல் கலந்து கொண்டு, 4 ஜி சேவையை தொடங்கி வைத்தார். இந்த சேவை மூலம் வினாடிக்கு 100 மெகாபைட்ஸ் அளவுக்கு வேகம் இருக்கும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்பொழுது கோல்கட்டாவில் மட்டும் அறிமுகமாகியுள்ள இந்த சேவைக்கு மாதம் ரூ 999 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 6 ஜிபி வரை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கான வயர்லெஸ் மோடம்கள் ரூ 7750 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 4 ஜிக்கான மல்டி டேடா கார்டு விலை ரூ 7999 ஆகும். இப்போதுள்ள 3 ஜி சேவையில் 21எம்பி வரைதான் தரவிறக்க வேகம் இருக்கும். ஆனால் 4 ஜியில் இது வினாடிக்கு 100 எம்பி என்பது குறிப்பிடத்தக்கது. கோல்கட்டாவைத் தொடர்ந்து, மராட்டி, பஞ்சாப் மற்றும் கர்நாடகாவில் இந்த சேவையை ஏர்டெல் தொடங்க உள்ளது.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|