பதிவு செய்த நாள்
10 ஏப்2012
23:53
புதுடில்லி, -நடப்பு பயிர் பருவத்தில் (ஜூலை-ஜூன்), சென்ற ஏப்ரல் 1ம் தேதி வரையிலுமாக, நாட்டின் உணவு தானியங்கள் கையிருப்பு, 21 சதவீதம் அதிகரித்துள்ளது என, இந்திய உணவுக் கழகம் (எப்.சி.ஐ.) தெரிவித்துள்ளது.நடப்பு பருவத்தில், ஏப்ரல் 1ம் தேதி வரையிலுமாக, கோதுமை கையிருப்பு, 2 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இது, கடந்த பருவத்தின் இதே காலத்தில், 1.54 கோடி டன்னாக இருந்தது. மதிப்பீட்டு காலத்தில், அரிசி கையிருப்பு, 2.89 கோடி டன்னிலிருந்து, 3.34 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. நடப்பு பயிர் பருவத்தில், முன் எப்போதும் இல்லாத சாதனை அளவாக, நெல் உற்பத்தி, 10.35 கோடி டன்னாகவும், கோதுமை உற்பத்தி, 8.83 கோடி டன்னாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.இதுவரை, 2.95 கோடி டன் நெல்லும், 15 லட்சம் டன் கோதுமையும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. முழு பயிர் பருவத்தில்,நெல் 3.50 கோடி டன்னும், கோதுமை 3.20 கோடி டன்னும் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|