பதிவு செய்த நாள்
10 ஏப்2012
23:55
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -பாரத் மிகுமின் கழகம் (பெல்) மற்றும் எண்ணூர் துறைமுகம் ஆகியவற்றுக்கிடையே ஜெனரேட்டர் இயந்திரம் ஒன்றை கையாள்வது தொடர்பான மோதலால், வடசென்னையில் 600 மெகா வாட் மின் உற்பத்தி திட்டம் செயல்பாட்டிற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.மின்தட்டுப்பாடுதமிழகத்தில் நிலவும் கடுமையான மின்தட்டுப்பாட்டை போக்க, மாநில அரசு, பாரம்பரிய மற்றும் மரபு சாரா எரிசக்தி திட்டங்களை செயல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. அவற்றில் ஒன்றாக, வடசென்னையில் 600 மெகாவாட் அனல் மின் உற்பத்தி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கு, மின் உற்பத்தி சாதனங்களை நிறுவி வரும் "பெல்' நிறுவனம், 400 டன் எடை கொண்ட ஜெனரேட்டரை, கப்பல் மூலம் குஜராத்தில் இருந்து கொண்டு வர திட்டமிட்டுள்ளது.ஆனால், இந்த இயந்திரத்தை கையாண்டால், கப்பல் தளம் சேதமடைந்து விடும் என்று கூறி, எண்ணூர் துறைமுகம் அனுமதி தராமல் இழுத்தடித்து வருகிறது.கடந்த ஆண்டு, இதே திட்டத்திற்காக, சாலை வழியே ஹரித்துவார் தொழிற்சாலையில் இருந்து ஜெனரேட்டரை கொண்டு வந்தபோது, திடீர் விபத்தில், இயந்திரம் ஆற்றில் விழுந்து சேதமடைந்தது.அதனால், இம்முறை, ஹரித்துவாரில் இருந்து குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்திற்கு ஜெனரேட்டர் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கிருந்து மிதவை கப்பல் மூலம் இந்த இயந்திரத்தை எண்ணூர் கொண்டு வர வேண்டும்.அனுமதி மறுப்பு"இதற்கான அனுமதிக்காக காத்திருக்கிறேம். ஆனால், இந்த இயந்திரத்தை இறக்கினால், கப்பல் தளம் சேதமாகி விடும் என, எண்ணூர் துறைமுக அதிகாரிகள் அஞ்சி, அனுமதி அளிக்க மறுக்கின்றனர். அவர்களின் அச்சத்தை போக்க, பல்வேறு ஆதாரங்களை வழங்கியுள்ளோம்' என்று "பெல்' (மின் பிரிவு) தலைமை செயல் அதிகாரி ஏ.கே.கோஷ் தெரிவித்துள்ளார்.இயந்திரத்தை கொண்டு வர அனுமதி கிடைத்தால், இரண்டு அல்லது மூன்று மாதங்களில் முதற்பிரிவில் மின் உற்பத்தியை துவங்கி விடலாம் என அவர் மேலும் கூறினார்.வடசென்னை அனல் மின் திட்டம் 6-8 மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு, மின் உற்பத்தி தொடங்கப்படும் என, "பெல்' நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|