பதிவு செய்த நாள்
10 ஏப்2012
23:57
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -நடப்பாண்டு ஜனவரி மாதத்தில், நாட்டின் தேயிலை உற்பத்தி 1.87 கோடி கிலோவாக சரிவடைந்துள்ளது. இது, கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், 2.09 கோடி கிலோவாக மிகவும் அதிகரித்து காணப்பட்டது. ஆக, இதன் உற்பத்தி 11 சதவீத அளவிற்கு குறைந்துள்ளது என, தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பங்களிப்புவட இந்தியாவின் ஒட்டு மொத்த தேயிலை உற்பத்தியில், அசாம் மாநிலத்தின் பங்களிப்பு 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. மதிப்பீட்டு மாதத்தில், இம்மாநிலத்தின் தேயிலை உற்பத்தி மிகவும் சரிவடைந்துள்ளது. மேலும், தென்னிந்தியாவில், தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவிலும் இதன் உற்பத்தி குறைந்துள்ளது.சென்ற ஜனவரி மாதத்தில், அசாம் மாநிலத்தின் தேயிலை உற்பத்தி, 43 சதவீதம் சரிவடைந்து, 34 லட்சம் கிலோவிலிருந்து, 19 லட்சத்து 60 ஆயிரம் கிலோவாக மிகவும் குறைந்துள்ளது. இருப்பினும், மேற்கு வங்கத்தில் இதன் உற்பத்தி 29 லட்சத்து 30 ஆயிரம் கிலோ என்ற அளவிலிருந்து, 29 லட்சத்து 90 ஆயிரம் கிலோவாக சற்று அதிகரித்துள்ளது. ஒட்டு மொத்த அளவில், வட இந்தியாவில் தேயிலை உற்பத்தி, 22 சதவீதம் குறைந்து, 64 லட்சத்து 10 ஆயிரம் கிலோவிலிருந்து, 49 லட்சத்து 90 ஆயிரம் கிலோவாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதே போன்று, தென்னிந்தியாவின் தேயிலை உற்பத்தியும், 6 சதவீதம் சரிவடைந்து, 1 கோடியே 45 லட்சம் கிலோவிலிருந்து, 1 கோடியே 37 லட்சம் கிலோவாக சரிவடைந்துள்ளது.தமிழ்நாடு தமிழ்நாட்டில் தேயிலை உற்பத்தி, 94 லட்சத்து 20 ஆயிரம் கிலோவிலிருந்து, 89 லட்சத்து 30 ஆயிரம் கிலோவாகவும், கேரளாவில், 46 லட்சத்து 80 ஆயிரம் கிலோவிலிருந்து, 43 லட்சத்து 80 ஆயிரம் கிலோவாகவும் சரிவடைந்துள்ளது. இதே போன்று, கர்நாடகாவில், இதன் உற்பத்தி, 4 லட்சத்து 9 ஆயிரம் கிலோ என்ற அளவிலிருந்து, 3 லட்சத்து 82 ஆயிரம் கிலோவாக வீழ்ச்சி கண்டுள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|