பதிவு செய்த நாள்
16 ஏப்2012
23:47
புதுடில்லி: நடப்பு 2012ம் ஆண்டு, ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில், 44 ஆயிரத்து 273 கோடி ரூபாய் நிகர முதலீடு மேற்கொண்டுள்ளன.நடப்பு ஏப்ரல் மாதம் 13ம் தேதி வரை, அன்னிய நிதி நிறுவனங்கள், 322 கோடி ரூபாயை பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளன. இதே காலத்தில், கடன் பத்திரங்களில், 214 கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.அன்னிய நிதி நிறுவனங்கள், நடப்பாண்டின், முதல் மூன்று மாதங்களில் இந்திய பங்குச் சந்தைகளில், அதிக அளவு முதலீடு செய்துள்ளன. நடப்பு 2012-13ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், அன்னிய நிறுவனங்களின், பங்கேற்பு ஆவணங்கள் வாயிலான முதலீட்டு வருவாய்க்கு வரி மற்றும் வரி விலக்கு சலுகைகளில் கட்டுப்பாடு போன்றவை அறிவிக்கப்பட்டன. இதனால், முதலீடு குறைந்தது. பங்கேற்பு ஆவணம் தொடர்பான விதிமுறைகள் மாற்றமின்றி தொடரும் என, மத்திய அரசு அறிவித்த பிறகும், நாட்டின் பொருளாதார மந்தநிலையை கருத்தில் கொண்டு, அன்னிய நிதி நிறுவனங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது குறைந்துள்ளதாக இத்துறை வல்லுனர்கள் தெரிவித்தனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|