தனிஷ்க் ஜுவல்லரி புதிய தங்க நாணயம்  தனிஷ்க் ஜுவல்லரி புதிய தங்க நாணயம் ... ரப்பர் உற்பத்தி 9 லட்சம் டன் ரப்பர் உற்பத்தி 9 லட்சம் டன் ...
டைம்லர் நிறுவனம்: ரூ.4,000 கோடியில் தொழிற்சாலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஏப்
2012
23:48

- வீ.அரிகரசுதன் -சென்னை, ஒரகடத்தில் அமைந்துள்ள டைம்லர் இந்தியா நிறுவனத்தின் வர்த்தக வாகனங்கள் தொழிற்சாலையை, முதல்வர் ஜெயலலிதா நாளை, திறந்து வைக்கிறார்.ஜெர்மனியை சேர்ந்த டைம்லர் குழுமம், புகழ் பெற்ற, "பென்ஸ்' கார்களையும், வர்த்தக வாகனங்களையும் தயாரித்து வருகிறது. இந்நிறுவனம், இந்தியாவைச் சேர்ந்த ஹீரோ குழுமத்துடன் இணைந்து, சென்னை அருகே ஓரகடத்தில், வர்த்தக வாகன தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க, கடந்த 2008ம் ஆண்டு ஜூலை மாதம், தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. பின், ஹீரோ குழுமம் பிரிந்து சென்று விட்டது.ஆண்டுக்கு, 80 ஆயிரம் இலகு மற்றும் கனரக வர்த்தக வாகனங்கள் தயாரிக்கும் திறன் கொண்ட தொழிற்சாலையில், முதல் கட்டமாக, 30 ஆயிரம் வாகனங்கள் தயாரிக்கப்படும் என தெரிகிறது. இங்கு தயாரிக்கப்படும் வர்த்தக வாகனங்கள் அனைத்தும்,"பாரத் பென்ஸ்' என்ற பெயரில் விற்பனை செய்யப்படும்.டைம்லர் தொழிற்சாலையில், இந்திய சந்தைக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்படும் வர்த்தக வாகனங்கள் அனைத்தும், உள்நாட்டிலேயே விற்பனை செய்யப்பட உள்ளன. சில ஆண்டுகளுக்கு பிறகு, ஐரோப்பா உள்ளிட்ட இதர நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஒரகடத்தில், 400 ஏக்கர் பரப்பில், 4,000 கோடி ரூபாய் முதலீட்டில், வர்த்தக வாகனங்கள் தயாரிக்கும் இத்தொழிற்சாலையின் இறுதிகட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. இதை முதல்வர் ஜெயலலிதா நாளை திறந்து வைக்கிறார்.இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறும்போது, "டைம்லர் நிறுவனம், முதலில் 3,000 கோடி ரூபாய் முதலீட்டிற்கு, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டாலும், இது, தற்போது, 4,400 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் பணியாளர் எண் ணிக்கை, 300 ஆக உள்ளது. இது விரைவில், 2,000ஐ தாண்டும்' என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)