பதிவு செய்த நாள்
16 ஏப்2012
23:50
புதுடில்லி: நாட்டின் கப்பல் கட்டுமானம் மற்றும் பழுதுபார்ப்பு துறை, வரும் 2015ம் ஆண்டில், 9,200 கோடி ரூபாயாக வளர்ச்சி காணும் என, அசோசெம் அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Œந்தை மதிப்புதற்போது, உள்நாட்டில் கப்பல் கட்டுதல் மற்றும் பழுதுபார்ப்பு துறையின் சந்தை மதிப்பு, 7,310 கோடி ரூபாயாக உள்ளது. சர்வதேச அளவில், இந்தியாவில் திறமையான வல்லுனர்கள் உள்ளனர். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இவர்களுக்கான ஊதியம் குறைவாக உள்ளது. மேலும், உள்நாட்டில், சரக்கு கப்பல்களுக்கான தேவை சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. எனவே, மத்திய அரசு, இத்துறைக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதுடன், பல்வேறு சலுகை திட்டங்களையும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கு நடவடிக்கை எடுக்கும் நிலையில், இதன் வளர்ச்சி மேலும் சிறப்பாக இருக்கும் என அசோசெம் தெரிவித்துள்ளது.உலகளவில், கப்பல் கட்டுமானம் மற்றும் பழுதுபார்ப்பு துறையின் சந்தை மதிப்பு 7.30 லட்ச கோடி ரூபாய் என்றளவில் உள்ளது. இதில், இந்தியாவின் பங்களிப்பு ஒரு சதவீதம் என்றளவில்தான் உள்ளது.வளர்ச்சிசர்வதேச அளவில், கப்பல் கட்டுமான துறை, ஒட்டு மொத்த அளவில், ஆண்டுக்கு 24 சதவீதம் என்றளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. இதையடுத்து, வரும் 2015ம் ஆண்டில், சர்வதேச அளவில், இத்துறையின் சந்தை மதிப்பு, 14 லட்ச கோடி ரூபாயாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள முக்கிய துறைமுகங்களில், தற்போது, 60 கோடி டன் அளவிற்கு சரக்கு பெட்டகங்கள் கையாளப்படுகின்றன. இது, வரும் 2015ம் ஆண்டில், 123 கோடி டன்னாகவும், 2020ல் 300 கோடி டன்னாகவும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.துறைமுகங்கள்உள்நாட்டில், 8,000 கிலோ மீட்டர் தொலைவிற்கு கடற்கரை வசதி உள்ளது. இப்பகுதிகளில், 27 கப்பல் கட்டும் தளங்களும், 12 பெரிய துறைமுகங்களும் உள்ளன. மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில், 200 துறைமுகங்கள் செயல்பட்டு வருகின்றன.கப்பல் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், துறைமுகங்களை ஆழப்படுத்துவதுடன், பெரிய கப்பல்கள் வந்து செல்லும் வகையில், துறைமுகங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என, அசோசெம் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|