பதிவு செய்த நாள்
16 ஏப்2012
23:55
மும்பை,: நாட்டின் பங்கு வர்த்தகம் வாரத்தின் தொடக்க தினமான திங்கள் கிழமையன்று ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. இந்நிலையில், சென்ற மார்ச் மாதத்தில், நாட்டின் பொது பணவீக்கம் குறைந்துள்ளது என்ற செய்தி வெளியானது. இதையடுத்து, ரிசர்வ் வங்கி, இன்று வெளியிடவுள்ள அதன் நிதி ஆய்வறிக்கையில், வங்கிகளுக்கான வட்டி விகிதங்களை குறைக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதன் காரணமாக, மந்தமாக இருந்த பங்கு வியாபாரம் மதியத்திற்கு பிறகு சூடுபிடித்தது.இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தமாக இருந்த நிலையில், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஓரளவிற்கு நன்கு இருந்தது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், மோட்டார் வாகனம், வங்கி, எண்ணெய், எரிவாயு, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், ரியல் எஸ்டேட், பொறியியல் சாதனங்கள், நுகர்பொருட்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை இருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் வர்த்தகம் முடியும்போது, 56.44 புள்ளிகள் அதிகரித்து, 17,150.95 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தினிடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக 17,173.06 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 17,010.16 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 16 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 14 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' வர்த்தகம் முடியும் போது, 18.75 புள்ளிகள் உயர்ந்து, 5,226.20 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தினிடையே, அதிகபட்சமாக 5,233.50 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக 5,183.50 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|