தனிநபர் உருக்கு பயன்பாடு 55 கிலோ தனிநபர் உருக்கு பயன்பாடு 55 கிலோ ... தங்கம் விலை சற்று உயர்வு தங்கம் விலை சற்று உயர்வு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பீ.எஸ்.இ., "சென்செக்ஸ்' 56 புள்ளிகள் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஏப்
2012
23:55

மும்பை,: நாட்டின் பங்கு வர்த்தகம் வாரத்தின் தொடக்க தினமான திங்கள் கிழமையன்று ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. இந்நிலையில், சென்ற மார்ச் மாதத்தில், நாட்டின் பொது பணவீக்கம் குறைந்துள்ளது என்ற செய்தி வெளியானது. இதையடுத்து, ரிசர்வ் வங்கி, இன்று வெளியிடவுள்ள அதன் நிதி ஆய்வறிக்கையில், வங்கிகளுக்கான வட்டி விகிதங்களை குறைக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதன் காரணமாக, மந்தமாக இருந்த பங்கு வியாபாரம் மதியத்திற்கு பிறகு சூடுபிடித்தது.இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தமாக இருந்த நிலையில், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஓரளவிற்கு நன்கு இருந்தது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், மோட்டார் வாகனம், வங்கி, எண்ணெய், எரிவாயு, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், ரியல் எஸ்டேட், பொறியியல் சாதனங்கள், நுகர்பொருட்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை இருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் வர்த்தகம் முடியும்போது, 56.44 புள்ளிகள் அதிகரித்து, 17,150.95 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தினிடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக 17,173.06 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 17,010.16 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 16 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 14 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' வர்த்தகம் முடியும் போது, 18.75 புள்ளிகள் உயர்ந்து, 5,226.20 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தினிடையே, அதிகபட்சமாக 5,233.50 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக 5,183.50 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)