நவரத்தினங்கள் ஏற்றுமதி குறைவுநவரத்தினங்கள் ஏற்றுமதி குறைவு ... திரிபோவன்தாஸ் பீம்ஜி ஜவேரி ரூ.210 கோடிக்கு பங்கு வெளியீடு திரிபோவன்தாஸ் பீம்ஜி ஜவேரி ரூ.210 கோடிக்கு பங்கு வெளியீடு ...
வருமான வரி வசூலில் சென்னை சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2012
23:41

திருச்சி: நாட்டிலேயே வருமான வரி வசூலில், சென்னை மண்டலம் முன்னணியில் உள்ளதாக மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பழநிமாணிக்கம் தெரிவித்துள்ளார்புதிய சேவை மையம்திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்தில், வருமான வரி சேவை மையத்தை திறந்து வைத்து பேசியதாவது:திருச்சி மண்டலம் இலக்கை விட, 25 சதவீதம் கூடுதலாக வருமான வரி வசூலித்துள்ளது. வருமான வரி செலுத்துவோருக்கு கூடுதல் சேவை வழங்கவே இந்த புதிய சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்துவோரை அதிகாரிகள் கொடுமைப்படுத்தியதாக இதுவரை எந்த புகாரும் வந்ததில்லை. சில இடங்களில் லஞ்சம், கொடுமைகள் இருந்தாலும், வருமான வரித்துறை சிறப்பாக செயல்படுகிறது.ஆடிட்டரை நம்பியுள்ள தொழில்முனைவோருக்கு சிக்கல் தான் ஏற்படும். சரியான வரியை செலுத்துங்கள். இல்லையெனில் கூடுதல் வரி செலுத்தும் நிலை ஏற்படும். விண்ணப்பித்த, 15 நாளில் பான் கார்டு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பழநிமாணிக்கம் பேசினார்.விழிப்புணர்வுசென்னை வருமான வரித்துறை தலைமை ஆணையர் ஜெயின் கூறியதாவது:மும்பை, கோல்கட்டா, டில்லி, சென்னை ஆகிய நான்கு நகரங்களில், சென்னையில் மட்டும் தான் இலக்கை தாண்டி வருமான வரி வசூலில் சாதனை புரியப்பட்டுள்ளது. சென்னையில், 33 ஆயிரத்து, 41 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 34 ஆயிரத்து, 586 கோடி ரூபாய் வசூலானது. இது இலக்கை காட்டிலும், 1,545 கோடி ரூபாய் கூடுதலாகும். இதற்கு வரி செலுத்துவோரிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வே முக்கிய காரணம்.சென்னையில் மெட்ரோ ரயில் நிறுவனம், 27 கோடி ரூபாய், ஏர்-இந்தியா நிறுவனம், 11 கோடி ரூபாய் வரி செலுத்தியுள்ளன. தமிழகத்தில் இந்தியன் வங்கி, ஐ.ஓ.பி., வங்கி, ஐ.டி.எப்.சி., ஆகியவையும் தொழில்நுட்ப (ஐ.டி.,) நிறுவனங்களில் காக்னிஸன்ட், ஹுண்டாய், ஸ்ரீராம் ஆகிய நிறுவனங்களும் அதிகளவில் வரி செலுத்துகின்றன.மொத்த வரிமொத்த வரி வசூலில், 37 சதவீதம் மூல வரியாக பிடித்தம் செய்யப்படுகிறது. 26 லட்சம் பேர் வருமான வரி செலுத்துகின்றனர். இதில், ஆன்-லைன் மூலம் வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.நடப்பு 2012-2013ம் ஆண்டிலிருந்து, 10 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்கள் எலக்ட்ரானிக் முறையில் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)