திரிபோவன்தாஸ் பீம்ஜி ஜவேரி ரூ.210 கோடிக்கு பங்கு வெளியீடு திரிபோவன்தாஸ் பீம்ஜி ஜவேரி ரூ.210 கோடிக்கு பங்கு வெளியீடு ... கயிறு பொருட்கள் ஏற்றுமதி  ரூ.850 கோடியை தாண்டியது கயிறு பொருட்கள் ஏற்றுமதி ரூ.850 கோடியை தாண்டியது ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் வட்டி விகிதம் குறைப்பில் வங்கிகள் தீவிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2012
23:42

மும்பை: நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி, சென்ற செவ்வாய் அன்று வங்கிகளுக்கு குறைந்த கால அடிப்படையில் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) 0.50 சதவீதம் குறைத்து 8 சதவீதமாக நிர்ணயித்தது. இதையடுத்து, வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் மற்றும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஐ.டீ.பீ.ஐ. பேங்க்இந்நிலையில் பல வங்கிகள், கடன் மற்றும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக, பொதுத்துறையைச் சேர்ந்த, ஐ.டீ.பீ.ஐ. பேங்க், அதன் அடிப்படை வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்து 10.50 சதவீதமாக குறைத்துள்ளது. மேலும், இவ்வங்கி, முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்து 15 சதவீதமாக குறைத்துள்ளது. இது தவிர, டெபாசிட்டிற்கான வட்டி விகிதத்தையும், குறிப்பாக, 6 மாதங்கள் மற்றும் அதற்கு மேல் முதிர்வு காலம் கொண்ட வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்களை 0.10 சதவீதம் முதல் 0.50 சதவீதம் வரை குறைத்துள்ளது. இந்த வட்டி விகித குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருவதாக இவ்வங்கி தெரிவித்துள்ளது.பஞ்சாப் நேஷனல் பேங்க்பொதுத் துறையைச் சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கியும், கடனுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ளது. இதையடுத்து, இவ்வங்கி வழங்கும், வீட்டு வசதி மற்றும் நிறுவன கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இவ்வங்கி, அதன் அடிப்படை கடன்களுக்கான வட்டி விகிதத்தை, தற்போதைய 10.75 சதவீதத்திலிருந்து, 10.50 சதவீதமாக குறைக்கவும் முடிவு செய்துள்ளது. அடிப்படை வட்டி விகிதம் என்பது, வங்கி நிர்ணயித்துள்ள 10.50 சதவீதத்திற்கும் கீழ் கடன் வழங்க முடியாதுஎன்பதாகும்.இவ்வங்கி, 1 கோடி ரூபாய்க்கும் குறைவான, குறித்த கால டெபாசிட்டிற்கான வட்டி விகிதத்தை 0.25-0.50 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்துள்ளது. இந்த வட்டி விகித குறைப்பு, மே மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக இவ்வங்கி தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)