பதிவு செய்த நாள்
19 ஏப்2012
23:42
மும்பை: நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி, சென்ற செவ்வாய் அன்று வங்கிகளுக்கு குறைந்த கால அடிப்படையில் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) 0.50 சதவீதம் குறைத்து 8 சதவீதமாக நிர்ணயித்தது. இதையடுத்து, வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் மற்றும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஐ.டீ.பீ.ஐ. பேங்க்இந்நிலையில் பல வங்கிகள், கடன் மற்றும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக, பொதுத்துறையைச் சேர்ந்த, ஐ.டீ.பீ.ஐ. பேங்க், அதன் அடிப்படை வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்து 10.50 சதவீதமாக குறைத்துள்ளது. மேலும், இவ்வங்கி, முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்து 15 சதவீதமாக குறைத்துள்ளது. இது தவிர, டெபாசிட்டிற்கான வட்டி விகிதத்தையும், குறிப்பாக, 6 மாதங்கள் மற்றும் அதற்கு மேல் முதிர்வு காலம் கொண்ட வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்களை 0.10 சதவீதம் முதல் 0.50 சதவீதம் வரை குறைத்துள்ளது. இந்த வட்டி விகித குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருவதாக இவ்வங்கி தெரிவித்துள்ளது.பஞ்சாப் நேஷனல் பேங்க்பொதுத் துறையைச் சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கியும், கடனுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ளது. இதையடுத்து, இவ்வங்கி வழங்கும், வீட்டு வசதி மற்றும் நிறுவன கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இவ்வங்கி, அதன் அடிப்படை கடன்களுக்கான வட்டி விகிதத்தை, தற்போதைய 10.75 சதவீதத்திலிருந்து, 10.50 சதவீதமாக குறைக்கவும் முடிவு செய்துள்ளது. அடிப்படை வட்டி விகிதம் என்பது, வங்கி நிர்ணயித்துள்ள 10.50 சதவீதத்திற்கும் கீழ் கடன் வழங்க முடியாதுஎன்பதாகும்.இவ்வங்கி, 1 கோடி ரூபாய்க்கும் குறைவான, குறித்த கால டெபாசிட்டிற்கான வட்டி விகிதத்தை 0.25-0.50 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்துள்ளது. இந்த வட்டி விகித குறைப்பு, மே மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக இவ்வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|