பதிவு செய்த நாள்
19 ஏப்2012
23:43
புதுடில்லி: கடந்த 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 18 ஆயிரத்து 490 கோடி டாலராக (9 லட்சத்து 24 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது என, வர்த்தக செயலர் ராகுல் குல்லார், அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.கடந்த 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி 21 சதவீதம் வளர்ச்சி கண்டு, 30 ஆயிரத்து 370 கோடி டாலராக (15 லட்சத்து 18 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. அதேசமயம், நாட்டின் இறக்குமதி, 32.1 சதவீதம் உயர்ந்து, 48 ஆயிரத்து 860 கோடி டாலராக (24 லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. ஏற்றுமதியை விட, இறக்குமதி அதிகரிக்கும் நிலையில் வர்த்தக பற்றாக்குறை ஏற்படுகிறது.சென்ற நிதியாண்டில், நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மொத்த இறக்குமதியில், கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தின் பங்களிப்பு அதிகமாக இருந்தது. மத்திய அரசு, நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், தங்கம் இறக்குமதி மீதான வரியை அதிகரித்துள்ளது. இதனால், வரும் 2012-13ம் நிதியாண்டில், தங்கத்தின் இறக்குமதி வெகுவாக குறையக்கூடும் என, குல்லார் தெரிவித்தார்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|