பதிவு செய்த நாள்
19 ஏப்2012
23:49
மும்பை,: நாட்டின் பங்கு வர்த்தகம், தொடர்ந்து நான்காவது நாளாக வியாழக்கிழமையன்றும் ஏற்றத்துடன் முடிவடைந்தது. ரிசர்வ் வங்கி, "ரெப்போ ரேட்' விகிதங்களை குறைத்ததையடுத்து, வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைக்க தொடங்கியுள்ளன. மேலும், ஒரு சில ஐரோப்பிய நாடுகள் கடன் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையிலும், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது. ஐ.டீ.பி.ஐ. பேங்க் மற்றும் பஞ்சாப் நேஷனல் பேங்க் ஆகியவை வட்டி விகிதங்களை குறைத்துள்ளன. இதையடுத்து, வங்கி, ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. டாட்டா மோட்டார்ஸ், மாருதி சுசூகி, பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டார் கார்ப் போன்ற நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்திருந்தது. இருப்பினும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், விப்ரோ, கெயில், இண்டால்கோ உள்ளிட்ட நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்து போனது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 111.32 புள்ளிகள் அதிகரித்து, 17,503.71 புள்ளிகளில் நிலை பெற்றது.வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 17,530.30 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,361.71 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 22 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 8 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 32.40 புள்ளிகள் உயர்ந்து, 5,332.40 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,342.45 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,291.30 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|