பதிவு செய்த நாள்
20 ஏப்2012
10:26
சென்னை: ""உரம் விலை உயர்வால் விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, 4 சதவீத "வாட்' வரி தமிழகத்தில் குறைக்கப்பட்டுள்ளது'' என, வேளாண்மைத் துறை அமைச்சர் தாமோதரன் தெரிவித்தார்.
சட்டசபையில் வேளாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., லாசர், ""நீர் பற்றாக்குறை, உரம், இடுபொருள்கள் விலையேற்றம், விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காத நிலை, தரமான விதைகள் கிடைக்காமை உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் விளை நிலங்களை விட்டு வெளியேறி வருகின்றனர்'' என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் தாமோதரன், ""தமிழகத்தில் தரமான விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. உரத்தின் விலையை மத்திய அரசு தான் முடிவு செய்கிறது. இருந்தும், தமிழக விவசாயிகள் விலை உயர்வால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, 4 சதவீத "வாட்' வரியை, முதல்வர் ஜெயலலிதா ரத்து செய்துள்ளார். அண்டை மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழகத்தில் தான், குறைந்த விலையில் உரம் விற்பனை செய்யப்படுகிறது'' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|