பதிவு செய்த நாள்
20 ஏப்2012
12:06
மதுரை: விற்பனையாளர்களுக்கான கமிஷனை உயர்த்தக்கோரி, ஏப்.,23 ல் அரசு சார்பு நிறுவனங்களின் அனைத்து பெட்ரோல், டீசல் பங்க் நிலையங்கள் மூடப்படும் என விற்பனையாளர்கள் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு பெட்ரோல் டிரேடர்ஸ் அசோசியேஷன் செயலர் கு.ராமச்சந்திரன் கூறியுள்ளதாவது; பெட்ரோல், டீசல் விற்பனையாளர்களுக்கான கமிஷனை உயர்த்த அரசு நியமித்துள்ள கமிட்டியின் பரிந்துரையை அரசு முழுவதும் அமலாக்காததற்கு எதிர்ப்பு தெரிவிக்க உள்ளோம். இதற்காக அனைத்து பெட்ரோல், டீசல் விற்பனைநிலையங்களில் ( இந்தியன்ஆயில், இந்துஸ்தான், பாரத் ஆகிய அரசு சார்புநிறுவனங்களின் 179 பங்க்குகள்) ஏப்.,23 ல் விற்பனை நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளார். எனவே அன்றைய தினம் பெட்ரோல் இன்றி, வாகனத்தை தள்ளி அவஸ்தைப்படாமல் இருக்க, முன்தினமே வாகன டாங்க்குகளை நிரப்பிக்கொள்வது நல்லது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|