பதிவு செய்த நாள்
20 ஏப்2012
13:37
மஹிந்திரா நிறுவனம், கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி, ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வைக்கிள்(எஸ்.யு.வி.,) பிரிவில் வரும் தார் ஜீப்பை அறிமுகப்படுத்தியது. கரடு முரடான பாதையில் செல்லும் வகையில், இந்த ஜீப், 4 வீல் டிரைவ் வசதி கொண்டது. ஆனால், தினமும் இந்த ஜீப்பை பயன்படுத்துபவர்களுக்கு, கேபின் பகுதியில், 'ஏஸி' வசதி இருந்தால், நன்றாக இருக்கும் என்று தோன்றியது. இது குறித்து, மஹிந்திரா நிறுவனத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது, 'ஏஸி' வசதி கொண்ட தார் ஜீப் விற்பனைக்கு வந்துள்ளது. இத்துடன், 'இன்ஜின் இம்மொபைலைஸர்' என்ற வசதியும், இந்த ஜீப்பில் உளளது. திருட்டு சாவி போட்டு ஜீப்பை இயக்க முடியாது. ஓரிஜனல் சாவியில் உள்ள மைக்ரோசிப் இருந்தால் தான், இந்த ஜீப்பின் இன்ஜின் ஸ்டார்ட்டாகும். இந்த ஜீப்பின் விலை ரூ.6.86 லட்சம்(எக்ஸ் ஷோரூம், டில்லி). பழைய தார் ஜீப்பை விட, 'ஏஸி' வசதி கொண்ட ஜீப், ரூ.87 ஆயிரம் அதிகம்.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|