பதிவு செய்த நாள்
21 ஏப்2012
16:17

வாஷிங்டன்: கூகுள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியும் தற்போதைய செயல் தலைவருமான எரிக் ஸ்மித்தின் ஆண்டு வருமானம் உயர்ந்துள்ளது. அவருடைய ஆண்டு வருமானம் ஒரு மில்லியன் டாலரில் இருந்து 1.25 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கூகுள் நிறுவனத்தில் ஸ்மித்துக்கு அடுத்த நிலையில் ஊதியம் பெறுவோரைவிட இது 4 மடங்கு அதிகமாகும். கூகுளின் மற்றொரு நிறுவனரான லர்ரி பேஸ் இப்பொழுது தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கிறார். அதேபோல் நிறுவனர்களில் மற்றொருவர் செர்ஜி பெயின். இருவரும் பெறும் தொகையைவிட இது கூடுதலாகும். இருவரும் தமது சொத்துகளின் பெரும்பகுதியை நேரடியாக கூகுளின் பங்குகளில் இணைத்திருக்கின்றனர். ஸ்மித் பொறுப்பேற்ற பிறகு கூகுள் தேடுதளமானது முன்னைவிட கூடுதல் மதிப்பைப் பெற்றுள்ளது. அவரால் தோராயமாக 38 பில்லியன் டாலர் கூடுதல் வருமானத்தை கடந்த ஆண்டு உருவாக்க முடிந்திருக்கிறது. ஸ்மித்துக்கு அடுத்ததாக கூகுள் நிறுவனத்தில் கூடுதல் வருமானம் பெறுபவர் வர்த்தக நடவடிக்கைகளுக்கான தலைமை அதிகாரி நிகேஷ் அரோரா ஆவார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|