அட்சய திரிதியை முன்னிட்டு தங்கம் விலை உயர்ந்ததுஅட்சய திரிதியை முன்னிட்டு தங்கம் விலை உயர்ந்தது ... தானிய உற்பத்தி 25.26 கோடி டன்னாக உயரும் தானிய உற்பத்தி 25.26 கோடி டன்னாக உயரும் ...
"2ஜி' மறுஏலத்திற்கான கெடு ஆகஸ்ட் வரை நீட்டிப்பு: மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஏப்
2012
00:50

புதுடில்லி:"2ஜி' அலைக்கற்றை உரிம மறு ஏலத்திற்கான கெடுவை, ஆகஸ்ட் இறுதி வரை சுப்ரீம் கோர்ட் நீட்டித்துள்ளது.
122 உரிமங்கள்"2ஜி' அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான முறைகேடுகளை விசாரித்து வரும், சுப்ரீம்கோர்ட், யூனினார், எடிசலாட்போன்ற நிறுவனங்களுக்கு, 22 வட்டங்களில் தொலைதொடர்பு சேவைக்காக வழங்கப்பட்ட 122 உரிமங்களை, கடந்த பிப்ரவரி 2ம் தேதி ரத்து செய்தது.
மேலும்,மத்திய அரசு, வரும் ஜூன் 2 ம் தேதிக்குள், ரத்து செய்யப்பட்ட உரிமங்களுக்கு மீண்டும் ஏலம் விட வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.இதைத் தொடர்ந்து, மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில், மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பல்வேறு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால், "2ஜி' அலைக்கற்றையை மறுஏலம் விடுவதற்கான காலத்தை, 400 நாட்களாக நீட்டிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.இம்மனுவை நேற்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், மத்திய அரசின் கோரிக்கையை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
எனினும், மறுஏலம் நடத்துவதற்கான காலக் கெடுவை, மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. இதன்படி, வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள், "2ஜி' அலைக்கற்றை ஏலத்தை நடத்தி முடிக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், வாடிக்கையாளர்களின் நலன் கருதி, வரும் செப்டம்பர் 7ம் தேதி வரை, "2ஜி' தொலை தொடர்பு சேவையை தடையின்றி வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடும் எதிர்ப்பு:இதனிடையே, தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்), மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ள அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்கான ஏல தொகைக்கு, பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஒரு மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றைக்கான குறைந்தபட்ச தொகை, 3,622 கோடி ரூபாயாகவும், அதிகபட்ச தொகை 14 ஆயிரத்து 480 கோடி ரூபாய் எனவும் "டிராய்' பரிந்துரைத்துள்ளது.
இதன் அடிப்படையில், பல கட்டங்களாக அலைக்கற்றை உரிமம் ஏலம் விடப்படும் பட்சத்தில், வரும் 2014ம் ஆண்டு, மத்திய அரசுக்கு, 7 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதே சமயம், இது,இந்திய தொலை தொடர்பு துறையின் வளர்ச்சியை பாதிக்கும் என்றும்,மொபைல் போன் சேவைக் கட்டணங்கள் உச்சத்திற்கு சென்று விடும் என்று தொழில் அமைப்பு கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
கட்டணம் உயர்வு:சுப்ரீம் கோர்ட்டின் கண்டனத்திற்கு ஆளான தொலை தொடர்பு நிறுவனங்கள், கடந்த 2008ம் ஆண்டு, 4.4 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை உரிமத்திற்காக 1,650 கோடி ரூபாயை செலுத்தின. டிராய் பரிந்துரைத்த கட்டணம் நடைமுறைக்கு வந்தால், இந்நிறுவனங்கள், தற்போது, ரத்து செய்யப்பட்ட, அதே அளவிலான அலைக்கற்றை உரிமங்களை பெற, குறைந்தபட்சம், 16 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)