பதிவு செய்த நாள்
25 ஏப்2012
00:50
புதுடில்லி:"2ஜி' அலைக்கற்றை உரிம மறு ஏலத்திற்கான கெடுவை, ஆகஸ்ட் இறுதி வரை சுப்ரீம் கோர்ட் நீட்டித்துள்ளது.
122 உரிமங்கள்"2ஜி' அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான முறைகேடுகளை விசாரித்து வரும், சுப்ரீம்கோர்ட், யூனினார், எடிசலாட்போன்ற நிறுவனங்களுக்கு, 22 வட்டங்களில் தொலைதொடர்பு சேவைக்காக வழங்கப்பட்ட 122 உரிமங்களை, கடந்த பிப்ரவரி 2ம் தேதி ரத்து செய்தது.
மேலும்,மத்திய அரசு, வரும் ஜூன் 2 ம் தேதிக்குள், ரத்து செய்யப்பட்ட உரிமங்களுக்கு மீண்டும் ஏலம் விட வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.இதைத் தொடர்ந்து, மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில், மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பல்வேறு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால், "2ஜி' அலைக்கற்றையை மறுஏலம் விடுவதற்கான காலத்தை, 400 நாட்களாக நீட்டிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.இம்மனுவை நேற்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், மத்திய அரசின் கோரிக்கையை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
எனினும், மறுஏலம் நடத்துவதற்கான காலக் கெடுவை, மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. இதன்படி, வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள், "2ஜி' அலைக்கற்றை ஏலத்தை நடத்தி முடிக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், வாடிக்கையாளர்களின் நலன் கருதி, வரும் செப்டம்பர் 7ம் தேதி வரை, "2ஜி' தொலை தொடர்பு சேவையை தடையின்றி வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடும் எதிர்ப்பு:இதனிடையே, தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்), மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ள அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்கான ஏல தொகைக்கு, பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஒரு மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றைக்கான குறைந்தபட்ச தொகை, 3,622 கோடி ரூபாயாகவும், அதிகபட்ச தொகை 14 ஆயிரத்து 480 கோடி ரூபாய் எனவும் "டிராய்' பரிந்துரைத்துள்ளது.
இதன் அடிப்படையில், பல கட்டங்களாக அலைக்கற்றை உரிமம் ஏலம் விடப்படும் பட்சத்தில், வரும் 2014ம் ஆண்டு, மத்திய அரசுக்கு, 7 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதே சமயம், இது,இந்திய தொலை தொடர்பு துறையின் வளர்ச்சியை பாதிக்கும் என்றும்,மொபைல் போன் சேவைக் கட்டணங்கள் உச்சத்திற்கு சென்று விடும் என்று தொழில் அமைப்பு கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
கட்டணம் உயர்வு:சுப்ரீம் கோர்ட்டின் கண்டனத்திற்கு ஆளான தொலை தொடர்பு நிறுவனங்கள், கடந்த 2008ம் ஆண்டு, 4.4 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை உரிமத்திற்காக 1,650 கோடி ரூபாயை செலுத்தின. டிராய் பரிந்துரைத்த கட்டணம் நடைமுறைக்கு வந்தால், இந்நிறுவனங்கள், தற்போது, ரத்து செய்யப்பட்ட, அதே அளவிலான அலைக்கற்றை உரிமங்களை பெற, குறைந்தபட்சம், 16 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|