"2ஜி' மறுஏலத்திற்கான கெடு ஆகஸ்ட் வரை நீட்டிப்பு: மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு"2ஜி' மறுஏலத்திற்கான கெடு ஆகஸ்ட் வரை நீட்டிப்பு: மத்திய அரசின் கோரிக்கை ... ... ரயில்வே கையாண்ட சரக்கு 98 கோடி டன் ரயில்வே கையாண்ட சரக்கு 98 கோடி டன் ...
தானிய உற்பத்தி 25.26 கோடி டன்னாக உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஏப்
2012
00:52

புதுடில்லி:நடப்பு 2011-12ம் பயிர் பருவத்தில் (ஜூலை-ஜூன்), நாட்டின் உணவு தானியங்கள் உற்பத்தி சாதனை அளவாக, 25.26 கோடி டன்னாக அதிகரிக்கும் என, மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது, பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட இரண்டாவது மதிப்பீட்டில், 25.04 கோடி டன்னாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
சென்ற 2010-11ம் பருவத்தில், உணவு தானியங்கள் உற்பத்தி, 24.48 கோடி டன்னாக இருந்தது. நாட்டின் நெல் உற்பத்தி, 10.34 கோடி டன்னாக உயரும் என, மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது, இதற்கு முந்தைய மதிப்பீட்டில், 10.27 கோடி டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. இதே போன்று, கோதுமை உற்பத்தியும், 8.83 கோடி டன்னிலிருந்து, 9.02 கோடி டன்னாக அதிகரிக்கும் என, மறு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், இதர தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளின் உற்பத்தி முறையே, 4.19 கோடி டன் மற்றும் 1.70 கோடி டன்னாக குறையும் என, மறு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது, முந்தைய மதிப்பீட்டில், முறையே 4.21 மற்றும் 1.73 கோடி டன்னாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.மறுமதிப்பீட்டில், பருத்தி உற்பத்தி, 3.41 கோடி பொதிகளிலிருந்து (ஒரு பொதி=170 கிலோ), 3.52 கோடி பொதிகளாக உயரும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற 2010-11ம் பயிர் பருவத்தில், நெல் உற்பத்தி 9.60 கோடி டன்னாகவும், கோதுமை உற்பத்தி 8.69 கோடி டன்னாகவும் இருந்தது. மேலும், இதர தானியங்கள் உற்பத்தி 4.37 கோடி டன்னாகவும், பருப்பு வகைகள் உற்பத்தி 1.82 கோடி டன் என்ற அளவிலும் இருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)