பதிவு செய்த நாள்
25 ஏப்2012
00:52
புதுடில்லி:நடப்பு 2011-12ம் பயிர் பருவத்தில் (ஜூலை-ஜூன்), நாட்டின் உணவு தானியங்கள் உற்பத்தி சாதனை அளவாக, 25.26 கோடி டன்னாக அதிகரிக்கும் என, மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது, பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட இரண்டாவது மதிப்பீட்டில், 25.04 கோடி டன்னாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
சென்ற 2010-11ம் பருவத்தில், உணவு தானியங்கள் உற்பத்தி, 24.48 கோடி டன்னாக இருந்தது. நாட்டின் நெல் உற்பத்தி, 10.34 கோடி டன்னாக உயரும் என, மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது, இதற்கு முந்தைய மதிப்பீட்டில், 10.27 கோடி டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. இதே போன்று, கோதுமை உற்பத்தியும், 8.83 கோடி டன்னிலிருந்து, 9.02 கோடி டன்னாக அதிகரிக்கும் என, மறு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், இதர தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளின் உற்பத்தி முறையே, 4.19 கோடி டன் மற்றும் 1.70 கோடி டன்னாக குறையும் என, மறு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது, முந்தைய மதிப்பீட்டில், முறையே 4.21 மற்றும் 1.73 கோடி டன்னாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.மறுமதிப்பீட்டில், பருத்தி உற்பத்தி, 3.41 கோடி பொதிகளிலிருந்து (ஒரு பொதி=170 கிலோ), 3.52 கோடி பொதிகளாக உயரும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற 2010-11ம் பயிர் பருவத்தில், நெல் உற்பத்தி 9.60 கோடி டன்னாகவும், கோதுமை உற்பத்தி 8.69 கோடி டன்னாகவும் இருந்தது. மேலும், இதர தானியங்கள் உற்பத்தி 4.37 கோடி டன்னாகவும், பருப்பு வகைகள் உற்பத்தி 1.82 கோடி டன் என்ற அளவிலும் இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|