பதிவு செய்த நாள்
25 ஏப்2012
00:56
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், செவ்வாய்க் கிழமையன்று ஓரளவிற்கு நன்கு இருந்தது. ஐரோப்பியாவில், ஒரு சில நாடுகளில் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடியை தொடர்ந்து, ஒரு சில இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் தொடர்ந்து நான்காவது நாளாக சரிவு நிலை காணப்பட்டது.
ஆனால், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்தது. இதையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில், மதியத்திற்கு பிறகு பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை அதிக விலைக்கு கைமாறின.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு அதிக தேவை இருந்தது. குறிப்பாக டி.சி.எஸ். நிறுவனப் பங்கின் விலை 12.84 சதவீதமும், விப்ரோ நிறுவனப் பங்கின் விலை 4.41 சதவீதமும் அதிகரித்திருந்தது. இருப்பினும், எல் அண்டு டி, பார்தி ஏர்டெல், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட சில நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்து போனது. தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்), 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்கான கட்டணத்தை உயர்த்தி பரிந்துரை செய்துள்ளது. இதனால், இத்துறை நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்து போனது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 110.61 புள்ளிகள் அதிகரித்து, 17,207.29 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 17,247.53 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,046.72 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 16 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 14 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 22.05 புள்ளிகள் உயர்ந்து, 5,222.65 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,232.35 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,180.35 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|