ரயில்வே கையாண்ட சரக்கு 98 கோடி டன்ரயில்வே கையாண்ட சரக்கு 98 கோடி டன் ... இந்திய பங்குகளில் ஏப்ரல் வரையிலுமாக... அன்னிய நிதி நிறுவனங்கள் ரூ.44,000 கோடி முதலீடு இந்திய பங்குகளில் ஏப்ரல் வரையிலுமாக... அன்னிய நிதி நிறுவனங்கள் ரூ.44,000 கோடி ... ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
விளைச்சல் குறைந்ததால்... ஊறுகாய் மாங்காய் விலை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஏப்
2012
00:57

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விளைச்சல் குறைவால், ஊறுகாய் மாங்காயின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. மாங்கனி மாவட்டம் என்று அழைக்கப்படும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 40 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் மா சாகுபடி செய்யப்படுகிறது.
தட்ப வெப்ப நிலை: குறிப்பாக பெங்களூரா, தோத்தாபுரி, மல்கோவா உள்ளிட்ட ரக மா அதிக பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஊறுகாய் தயாரிப்பதற்கு பயன்படும் பீத்தர் உள்ளிட்ட மா வகைகளும் சாகுபடி செய்யப்படுகின்றன.வழக்கமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஏப்ரல் முதல் வாரத்தில் முன்பருவ ரகமான பீத்தர் மற்றும் ஊறுகாய் மாங்காய்களின் அறுவடை துவங்கும். ஆனால், இந்தாண்டு தட்பவெப்ப நிலை காரணமாக, மா மரங்களில் பூக்கள் பூப்பது தாமதமானது. இதனால், ஊறுகாய் மாங்காய் அறுவடையும் தாமதமாகியுள்ளது.
வேலம்பட்டியில் உள்ள மாங்காய் மண்டிகளில் தினம், 2 டன் அளவுக்கு ஊறுகாய் மாங்காய் சேகரிக்கப்பட்டு வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த ஆண்டு விளைச்சல் அதிகமாக இருந்ததால், ஒரு கிலோ ஊறுகாய் மாங்காய் நான்கு ரூபாய்க்கு விற்பனையானது.இந்தாண்டு விளைச்சல் குறைவால், ஊறுகாய் மாங்காயின் விலை அதிகரித்துள்ளது. தற்போது, ஒரு கிலோ ஊறுகாய் மாங்காய், 10 ரூபாயில் இருந்து, 14 ரூபாய் வரை விற்பனையாகிறது.
கூச்கல்லூரை சேர்ந்த மாங்காய் வியாபாரி மாதையன் கூறியது:பொதுவாக இந்த ஆண்டு மா விளைச்சல் குறைந்துள்ளதால், அனைத்து ரக மாங்காய்களின் விலையும் உயரும். இதே போல் தான் ஊறுகாய் மாங்காயின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.
சந்தைக்கு வரத்து:பொதுவாக ஊறுகாய் தயாரிக்கும், நிறுவனங்கள் ஊறுகாய் மாங்காய்களை வாங்கி இருப்பு வைத்து, ஊறுகாய் தயாரிப்பர். இதற்காக, கடந்தாண்டு நாள் ஒன்றுக்கு வேலம்பட்டி பகுதியில் இருந்து மட்டும், 10 டன் காய்கள் அனுப்பப்பட்டன. இந்தாண்டு விளைச்சல் குறைவால் அதிக பட்சமாக நாள் ஒன்றுக்கு, 2 டன் மாங்காய்கள் மட்டுமே சந்தைக்கு வருகிறது. இவ்வாறு மாதையன் கூறினார்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)