பதிவு செய்த நாள்
26 ஏப்2012
00:15
புதுடில்லி:இந்தியாவில், ஒருவர், ஓராண்டிற்கு சராசரியாக, 19 கிலோ சர்க்கரை பயன்படுத்துவதாக, சர்வதேச சர்க்கரை கூட்டமைப்பு (ஐ.எஸ்.ஓ) தெரிவித்துள்ளது.சர்வதேச அளவில், சர்க்கரைக்கான தேவை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால், பல நாடுகள், சர்க்கரை உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
உலகளவில், பிரேசில் நாட்டை அடுத்து, சர்க்கரை உற்பத்தியில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது, சர்வதேச சர்க்கரை உற்பத்தி, 17.20 கோடி டன் என்றளவில் உள்ளது. இதை, வரும் 2020ம் ஆண்டில், 20 கோடி டன்னாக அதிகரிக்க வேண்டும் என, ஐ.எஸ்.ஓ மதிப்பிட்டுள்ளது. சர்வதேச அளவில், ஆண்டுக்கு தனிநபர் சர்க்கரை பயன்பாடு, சராசரியாக, 24 கிலோ என்றளவில் உள்ளது.
இது, சீனா மற்றும் ஆப்ரிக்கா நாடுகளில் மிகவும் குறைவாக உள்ளது. சீனாவில், தனிநபர் சர்க்கரை பயன்பாடு 10-11 கிலோ என்றளவில் உள்ளது.நடப்பு சர்க்கரை பருவத்தில், இந்தியாவில், சர்க்கரை உற்பத்தி, 2.52 கோடி டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், இதன் பயன்பாடு, 2.20 கோடி என்றளவில் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|