வீட்டு வசதி கண்காட்சிவீட்டு வசதி கண்காட்சி ... அல்ட்ராடெக் நிறுவனம் நிகர லாபம் 42 சதவீதம் உயர்வு அல்ட்ராடெக் நிறுவனம் நிகர லாபம் 42 சதவீதம் உயர்வு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
கச்சா எண்ணெய் உற்பத்தி 32 லட்சம் டன்னாக குறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஏப்
2012
00:20

புதுடில்லி:நடப்பாண்டு மார்ச் மாதத்தில், நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தி, 2.9 சதவீதம் குறைந்து, 32 லட்சம் டன்னாகவும், இயற்கை எரிவாயு உற்பத்தி, 10.1 சதவீதம் குறைந்து, 385 கோடி கன மீட்டராகவும் சரிவடைந்துள்ளது என, மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி குறைவாக உள்ளது. இதனால், இவை, ஈராக், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலிருந்து அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. நாட்டின் மொத்த இறக்குமதி செலவினத்தில், இவற்றின் பங்களிப்பு மிகவும் அதிகமாக உள்ளது.
பங்களிப்பு:இந்தியா, நாளொன்றுக்கு, 24 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை இறக்குதி செய்கிறது. இதில், உள்நாட்டு விநியோகத்திற்கான பங்களிப்பு, 7.50 லட்சம் பீப்பாய் என்றளவில் உள்ளது. இதேபோல், நாட்டின் இயற்கை எரிவாயு உற்பத்தி, நாளொன்றுக்கு, 11.50 கோடி கன மீட்டராக உள்ளது. ஆனால், உள்நாட்டில் இதற்கான தேவை, 16.50 கோடி கன மீட்டராக உள்ளது. உற்பத்தியை விட, தேவை அதிகமாக இருப்பதால், நிலவும் பற்றாக்குறையை சமாளிக்க, இயற்கை எரிவாயு அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது.
இயற்கை எரிவாயு:சென்ற மார்ச் மாதத்தில், நாட்டின் இயற்கை எரிவாயு உற்பத்தி, 385 கோடி கன மீட்டராக குறைந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 10.1 சதவீதம் (428 கோடி கன மீட்டர்) குறைவாகும். இதையடுத்து, இதன் உற்பத்தி, தொடர்ந்து, 16 மாதங்களாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டில், இயற்கை எரிவாயு உற்பத்தியில், முகேஷ் அம்பானி தலைமையில் செயல்படும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அதிக பங்களிப்பை கொண்டுள்ளது. இந்நிறுவனம், கிருஷ்ணா -கோதாவரி படுகையில், "டீ6' எண்ணெய் வயலில், இயற்கை எரிவாயு உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இங்கு, எரிவாயு உற்பத்தி குறைந்ததை அடுத்து, மார்ச் மாதத்தில், ஒட்டுமொத்த அளவில், இதன் உற்பத்தி குறைந்துள்ளது.
சென்ற நிதியாண்டில், இயற்கை எரிவாயு உற்பத்தி, 4,755 கோடி கன மீட்டராக குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய 2010-11ம் நிதியாண்டில், 5,222 கோடி கன மீட்டராக உயர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கச்சா எண்ணெய்: சென்ற மார்ச் மாதத்தில், கச்சா எண்ணெய் உற்பத்தி, 32 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 2.9 சதவீதம் (33 லட்சம் டன்) குறைவாகும். இது, இதற்கு முந்தைய பிப்ரவரி மாதத்தில், சற்று உயர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.மதிப்பீட்டு மாதத்தில், அசாம் மாநிலத்தின் கச்சா எண்ணெய் உற்பத்தி, 100 சதவீதமும், மும்பையில் உள்ள, பொதுத் துறையைச் சேர்ந்த ஒ.என்.ஜி.சி.நிறுவனத்தின் கச்சா எண்ணெய் உற்பத்தி, 4.7 சதவீதமும் குறைந்துள்ளது. இதனால் தான், மார்ச் மாதத்தில், ஒட்டுமொத்த அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்துள்ளது.
சென்ற 2011-12ம் நிதியாண்டில், கச்சா எண்ணெய் உற்பத்தி, 3.89 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டில், 3.77 கோடி டன்னாக இருந்தது என, பெட்ரோலிய அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டில், பொதுத் துறை நிறுவனங்களின், 17 சுத்திகரிப்பு ஆலைகளும், தனியார் துறை நிறுவனங்களின் இரண்டு சுத்திகரிப்பு ஆலைகளும் செயல்படுகின்றன. சென்ற மார்ச் மாதத்தில், இவ்வாலைகள், மொத்தத்தில், 1.52 கோடி டன் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை உற்பத்தி செய்துள்ளன. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 1.6 அதிகமாகும்.இதே மாதங்களில், குஜராத் ஜாம்நகரில் செயல்படும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சுத்திகரிப்பு ஆலையின் உற்பத்தி, 6.6 சதவீதமும், எஸ்ஸார் நிறுவனத்தின், வாடிநார் சுத்திகரிப்பு ஆலையின் உற்பத்தி, 10.4 சதவீதமும் அதிகரித்துள்ளது.
பெட்ரோல், டீசல்சென்ற மார்ச் மாதத்தில், பெட்ரோலிய பொருட்களின் பயன்பாடு, 5.1 சதவீதம் உயர்ந்து, 1.35 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. டீசல் விற்பனை, 10.3 சதவீதமும், பெட்ரோல் பயன்பாடு, 11.5 சதவீதமும், நாப்தா மற்றும் இயற்கை எரிவாயு பயன்பாடு, 19.5 சதவீதம் உயர்ந்துள்ளது என அமைச்சகம் தெரிவித்துள்ளது

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)