பதிவு செய்த நாள்
26 ஏப்2012
10:25
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 41.96 புள்ளிகள் அதிகரித்து 17193.25 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 13.60 புள்ளிகள் அதிகரித்து 5215.60 புள்ளிகளோடு காணப் பட்டது. பங்கு வர்த்தகம் புதன்கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில், பங்கு வியாபாரம் ஓரளவிற்கு நன்கு இருந்தது. இந்நிலையில், சர்வதேச மதிப்பீட்டு நிறுவனமான ஸ்டாண்டர்டு அண்டு பூர்ஸ் (எஸ் அண்டு பி), இந்தியாவின் தரக் குறியீட்டை குறைத்து மதிப்பிட்டுள்ளது. இதையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில், பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்து காணப்பட்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|