பதிவு செய்த நாள்
26 ஏப்2012
11:29
இந்தியாவில் கார் விற்பனையில் இரண்டாவது இடத்தில் இருப்பது, தென் கொரியாவை சேர்ந்த ஹுண்டாய் நிறுவனம். இந்த நிறுவனத்தின் வெர்னா மற்றும் ஐ20 கார்களின் டீஸல் மாடல் கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால், தேவைக்கு ஏற்ப சப்ளை இல்லாத காரணத்தால், காத்திருப்பு காலம் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக, வெர்னா காருக்கு முன்பதிவு செய்தால், 6 மாதத்துக்கு பிறகே டெலிவரி செய்யப்படுகிறது. ஐ20 காருக்கும் சில மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. பெட்ரோல் விலை உயர்வால், இந்திய மக்கள் டீஸல் கார்களை நாட தொடங்கியுள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில், காத்திருப்பு காலம் அதிகரித்தால், வெர்னா மற்றும் ஐ20 கார்களுக்கு பதிலாக, பிற நிறுவனங்களின் கார்கள் மீது, மக்கள் கவனம் திரும்பி விடும். இப்பிரச்னையை தவிர்க்க, இந்த இரண்டு மாடல் கார்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்ய ஹுண்டாய் நிறுவனம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி, தற்போதுள்ள மாதத்துக்கு, 7,000 கார்கள் உற்பத்தி என்பது வரும் மாதத்தில் இருந்து, 10,000 கார்கள் உற்பத்தி என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கார்களுக்கு தேவையான டீஸல் இன்ஜின்கள், தென் கொரியாவில் இருந்து வரவழைக்கப்படுகின்றன. இதன் மூலம், வெர்னா காருக்கான காத்திருப்பு காலம் இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை என்ற நிலைக்கும், ஐ 20 காருக்கான காத்திருப்பு காலம், ஒரு மாதம் என்ற நிலைக்கும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|