அல்ட்ராடெக் நிறுவனம் நிகர லாபம் 42 சதவீதம் உயர்வு அல்ட்ராடெக் நிறுவனம் நிகர லாபம் 42 சதவீதம் உயர்வு ... சுந்தரம் ஹோம் பைனான்ஸ் ரூ. 2,500 கோடி கடன் வழங்க இலக்கு சுந்தரம் ஹோம் பைனான்ஸ் ரூ. 2,500 கோடி கடன் வழங்க இலக்கு ...
கடந்த நிதியாண்டில் 5.36 லட்சம் டன் பாக்கு உற்பத்தி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஏப்
2012
00:04

கோழிக்கோடு: நாட்டின் பாக்கு உற்பத்தி, கடந்த 2010-11ம் நிதியாண்டில் 5.36 லட்சம் டன்னாக இருக்கும் என, கோழிக்கோடு பாக்கு மற்றும் நறுமணப் பொருள்கள் இயக்குனரகம்
மதிப்பிட்டுள்ளது.இது, 4.1 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியாகும். இந்தியாவில், பாக்கு உற்பத்தியில் கர்நாடகா முதலிடத்தில் உள்ளது. மதிப்பீட்டு காலத்தில்
கர்நாடகாவில் 1.95 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான பாக்கு மரங்களில் இருந்து, 2.58 லட்சம் டன் பாக்கு உற்பத்தி செய்யப்பட்டது. கடந்த 1998-99ம் ஆண்டு முதல், பாக்கு பயிரிடும்
பரப்பளவு 40 சதவீதம் உயர்ந்துள்ளது. இதில், கர்நாடகாவில் மட்டும் 70 சதவீத அளவிற்கு பரப்பளவு அதிகரித்துள்ளது. இதற்கு முன்னர், பாக்கு உற்பத்தியில், கேரளா, அசாம் ஆகிய
மாநிலங்களே சிறந்து விளங்கின. தற்போது, மேலும் பல மாநிலங்களில் பாக்கு விவசாயம் பரவலாக வளர்ச்சி பெற்று வருகிறது. சுவை கூட்டப்பட்ட சுபாரி தயாரிப்பில், பாக்கு அதிக அளவில்
பயன்படுத்தப்படுகிறது. பிற வகைகளில் வர்த்தக ரீதியிலான பயன்பாடு மிக குறைவாகவே உள்ளது. இதுவே இத்துறைக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது.பாக்கு அடிப்படையிலான கலப்பு
பயிர்களை உருவாக்கும் பட்சத்தில், பாக்கு விலை சரிவால் ஏற்படும் பாதிப்பு குறையும் என, இத்துறையினர் தெரிவித்துள்ளனர். பாக்கு விலையில் காணப்படும் அபரிமிதமான ஏற்றத்தாழ்வு,
நோய் தாக்குதல், குறிப்பாக அழுகும் நோய் மற்றும் மஞ்சள் இலை நோய் ஆகியவை தான் பாக்கு வேளாண்மைக்கு பிரச்னையாக உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)