பதிவு செய்த நாள்
27 ஏப்2012
00:04
கோழிக்கோடு: நாட்டின் பாக்கு உற்பத்தி, கடந்த 2010-11ம் நிதியாண்டில் 5.36 லட்சம் டன்னாக இருக்கும் என, கோழிக்கோடு பாக்கு மற்றும் நறுமணப் பொருள்கள் இயக்குனரகம்
மதிப்பிட்டுள்ளது.இது, 4.1 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியாகும். இந்தியாவில், பாக்கு உற்பத்தியில் கர்நாடகா முதலிடத்தில் உள்ளது. மதிப்பீட்டு காலத்தில்
கர்நாடகாவில் 1.95 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான பாக்கு மரங்களில் இருந்து, 2.58 லட்சம் டன் பாக்கு உற்பத்தி செய்யப்பட்டது. கடந்த 1998-99ம் ஆண்டு முதல், பாக்கு பயிரிடும்
பரப்பளவு 40 சதவீதம் உயர்ந்துள்ளது. இதில், கர்நாடகாவில் மட்டும் 70 சதவீத அளவிற்கு பரப்பளவு அதிகரித்துள்ளது. இதற்கு முன்னர், பாக்கு உற்பத்தியில், கேரளா, அசாம் ஆகிய
மாநிலங்களே சிறந்து விளங்கின. தற்போது, மேலும் பல மாநிலங்களில் பாக்கு விவசாயம் பரவலாக வளர்ச்சி பெற்று வருகிறது. சுவை கூட்டப்பட்ட சுபாரி தயாரிப்பில், பாக்கு அதிக அளவில்
பயன்படுத்தப்படுகிறது. பிற வகைகளில் வர்த்தக ரீதியிலான பயன்பாடு மிக குறைவாகவே உள்ளது. இதுவே இத்துறைக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது.பாக்கு அடிப்படையிலான கலப்பு
பயிர்களை உருவாக்கும் பட்சத்தில், பாக்கு விலை சரிவால் ஏற்படும் பாதிப்பு குறையும் என, இத்துறையினர் தெரிவித்துள்ளனர். பாக்கு விலையில் காணப்படும் அபரிமிதமான ஏற்றத்தாழ்வு,
நோய் தாக்குதல், குறிப்பாக அழுகும் நோய் மற்றும் மஞ்சள் இலை நோய் ஆகியவை தான் பாக்கு வேளாண்மைக்கு பிரச்னையாக உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|