பதிவு செய்த நாள்
27 ஏப்2012
00:10
கடந்த ஆண்டு,சோயா பயிரிட்டதில், விவசாயிகள் சிறப்பான அளவில் வருவாய் ஈட்டியதால்,நடப்பு கரீப் பருவத்தில்,மேலும் அதிக அளவில் சோயா பயிரிடுவார்கள் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.இதன்படி, சோயா பயிரிடும் பரப்பளவு, சாதனை அளவாக 8-10 சதவீதம் அதிகரித்து 1.02 கோடி ஹெக்டேராக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு 93 லட்சம் ஹெக்டேரில்
சோயா பயிரிடப்பட்டது.நாட்டில், அதிக அளவில் சோயா உற்பத்தி செய்யும் மாநிலம் என்ற சிறப்பை மத்திய பிரதேசம் பெற்றுள்ளது. இம்மாநிலத்தில், சோயா விற்பனை வாயிலான லாபம்
மிதமான அளவில் உள்ள போதிலும், நடப்பாண்டில் சோயா பயிரிடும் பரப்பளவு ஓரளவிற்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தமிழ்நாடுஅதே சமயம், தமிழ்நாடு, மகாராஷ்ட்ரா, ராஜஸ்தான், ஆந்திரா ஆகிய மாநிலங்களில், நடப்பு கரீப் பருவத்தில் சோயா பயிரிடும் பரப்பளவு அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.உற்பத்தி திறன்இதையடுத்து, ஒட்டுமொத்தமாக, நாட்டின் சோயா உற்பத்தி அதிகரித்து, உள்நாட்டு எண்ணெய் உற்பத்தி ஆலைகளுக்கு போதுமான அளவிற்கு எண்ணெய் வித்துக்கள் கிடைக்கும்.கடந்த சில
ஆண்டுகளாகவே, எண்ணெய் உற்பத்தி ஆலைகளுக்கு, போதுமான அளவிற்கு எண்ணெய் வித்துக்கள் கிடைக்காமல், அவற்றின் உற்பத்தி திறனுக்கும் குறைவாகவே இயங்கி வருகின்றன
என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், சோயா உற்பத்தி அதிகரிக்கும் பட்சத்தில், எண்ணெய் ஆலைகளின் உற்பத்தி திறன், சிறப்பான அளவில் பயன்படுத்திக் கொள்ளப்படும். அதே சமயம், எண்ணெய் வித்துக்கள்
இறக்குமதியை பெரிதும் சார்ந்திருக்கும் நிலையும் தவிர்க்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவின் தாவர எண்ணெய் தேவையில், 55-60 சதவீதம் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்து
கொள்ளப்படுகிறது. குறிப்பாக, சோயா,சூரியகாந்தி மற்றும் இதர எண்ணெய் வகைகளில் கலப்பதற்காக, பாமாயில் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது.இறக்குமதிஇந்த எண்ணெய் வகைகள், இந்தோனேஷியா, அர்ஜென்டினா, மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டு, நாட்டின் ஒட்டுமொத்த சோயா உற்பத்தி 1
கோடி டன்னாக இருந்தது.பொதுவாக, ஜூன் - ஜூலை மாதங்களில் சோயா விதைப்பு பணிகள் நடைபெறும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை அறுவடை நடைபெறும்.
சோயா உற்பத்தியில் அமெரிக்கா முதலிடம்
கிழக்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்ட சோயா, கொழுப்பற்ற, புரதச் சத்துள்ள தானியமாகும்.உலகில் உற்பத்தியாகும் சோயாவில், 85 சதவீதம் சோயா எண்ணெய்க்காக அரைக்கப்படுகிறது.
இதன் மூலம் கிடைக்கும் புண்ணாக்கு, கால்நடை உணவுகள், நொறுக்குத் தீனிகள், புரத உணவுகள், சோயா பால் உள்ளிட்டவற்றை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. மேலும், சமையல்
எண்ணெய், தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் எண்ணெய் வகைகளின் தயாரிப்பிலும் சோயா, குறிப்பிடத்தக்க பங்களிப்பை கொண்டுள்ளது.சோயாவில், 40 சதவீதம் புரதம், 20 சதவீதம்
எண்ணெய், 35 சதவீதம் மாவுப் பொருள், 5 சதவீத கனிம சத்து அடங்கியுள்ளன. சோயாவில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான எட்டு அமினோ அமிலங்கள் உள்ளன.உலகளவில் சோயா
உற்பத்தியில் 35 சதவீத பங்களிப்புடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில் பிரேசில் (27 சதவீதம்), அர்ஜென்டினா (19 சதவீதம்), சீனா (6 சதவீதம்), இந்தியா (4 சதவீதம்)
ஆகிய நாடுகள் உள்ளன. பராகுவே, பொலிவியா, கனடா நாடுகளும் சோயா உற்பத்தியில் வேகமாக முன்னேறி வருகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|