பதிவு செய்த நாள்
27 ஏப்2012
10:02
சென்னை: "டாஸ்மாக்' மூலம் கடந்த ஆண்டு, அரசுக்கு 18 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட, 20 சதவீதம் அதிகம். தனியார் மூலம் மது வகைகள் விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழக அரசு, 2003 நவம்பர் மாதம் முதல், "டாஸ்மாக்' நிறுவனம் மூலம் விற்பனை செய்யும் துணிச்சலான முடிவை எடுத்தது. இதன் மூலம், தனியார் செய்து வந்த தீர்வை செலுத்தப்படாத மதுபான விற்பனை முற்றிலும் தடுக்கப்பட்டதால், அரசுக்கு வருவாய் அதிகரித்து வருகிறது. டாஸ்மாக் விற்பனையைத் துவக்கிய, 2003-04ம் ஆண்டில், 3,639.93 கோடியாக இருந்த வருவாய், படிப்படியாக உயர்ந்து, 2010-11ம் ஆண்டில், 14,965.42 கோடியாக அதிகரித்தது. கடந்த 2011-12ம் ஆண்டில், 18,081.16 கோடி ரூபாய், அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. இது, முத்தைய ஆண்டை விட, 20 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
வருவாய் உயர்வு பட்டியல்
ஆண்டு வருவாய்
2003-04 3,639.93
2004-05 4,872.03
2005-06 6,030.77
2006-07 7,473.16
2007-08 8,821.16
2008-09 10,601.50
2009-10 12,498.22
2010-11 14,965.42
2011-12 18,081.16
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|