ரயில்வே வருவாய் ரூ.3,299கோடிரயில்வே வருவாய் ரூ.3,299கோடி ... இந்தியா - அமெரிக்கா 8 பில்லியன் டாலர் ஒப்பந்தம் இந்தியா - அமெரிக்கா 8 பில்லியன் டாலர் ஒப்பந்தம் ...
உரத்திற்கான தேவை 2.14 கோடி டன்னாக உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2012
00:19

புதுடில்லி:வரும் கரீப் பருவத்தில் (குளிர்கால சாகுபடி), நாட்டில், யூரியா, பொட்டாஷ், டை அமோனியம் பாஸ் பேட் உள்ளிட்ட உர வகைகளுக்கான தேவை, 2.14 கோடி டன்னாக அதிகரிக்கும் என, மத்திய வேளாண் இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா, பார்லிமென்டில் தெரிவித்தார்.
யூரியா உரம்:மேற்கண்ட மொத்த உர வகைகளுக்கான தேவையில், கரீப் பருவத்திற்கு, 1.58 கோடி டன் யூரியா வும், 69.40 லட்சம் டன் டை -அமோனியம் பாஸ்பேட்டும், 55.50 லட்சம் டன் கலப்பு வகை உரமும், 28.90 லட்சம் டன் சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் உரமும், 21.90 லட்சம் டன் பொட்டாஷ் உரமும் தேவைப்படும் என, அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு, ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான சாகுபடி காலத்தில், 2.88 கோடி டன் யூரியா உரத்திற்கு தேவை இருந்தது. இதுதவிர, 1.23 கோடி டன் டை-அமோனியம் பாஸ்பேட்டும், 45 லட்சம் டன் பொட்டாஷ் உரமும், 1.02 கோடி டன் கலப்பு உரத்திற்கும் தேவை இருந்தது.உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் அள விற்கு, இவற்றின் உற்பத்தி இல்லாததால், நம் நாடு, ரசாயன உரங்களை வெளிநாடுகளிலிருந்து அதிகளவில் இறக்குமதி செய்து கொள்ள வேண்டியுள்ளது.கடந்த 9வது மற்றும் 10வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், நாட்டின் மொத்த உரத் தேவையில், முறையே, 12 சதவீதம் மற்றும் 22 சதவீத அளவிற்கு, உர வகைகள் இறக்குமதி செய்து கொள்ளப்பட்டன.
புதிய தொழிற்சாலை:அதிகரித்து வரும், உரத் தேவையை கருத்தில் கொண்டு, மத்திய அரசு, நாட்டின் பல மாநிலங்களில், புதிதாகவும், ஏற்கனவே உள்ள உரத் தொழிற்சாலை களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் வகை யில், புதிய முதலீட்டு கொள்கையை அமல்படுத்தி வருகிறது.உள்நாட்டில் உர உற்பத்திக்கும், தேவைக்கும் இடை யில், 90 லட்சம் டன் என்றளவில் இடைவெளி உள்ளது. என, அமைச்சர் மேலும் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)