பதிவு செய்த நாள்
28 ஏப்2012
00:25

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக் கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. அண்மையில், இந்தியாவிற்கான கடன் தகுதி மதிப்பீட்டை குறைத்த, ஸ்டாண்டர்டு அண்டு பூர்ஸ் (எஸ் அண்டு பி) நிறுவனம், நேற்று ஸ்பெயின் நாட்டிற்கான கடன் தகுதி குறியீட்டையும் குறைத்தது. இதையடுத்து, ஐரோப்பா மற்றும் இதர ஆசிய நாடுகளில், பங்கு வர்த்தகம் சுணக்கம் கண்டது.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், நுகர்வோர் சாதனங்கள், வங்கி, தகவல் தொழில் நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை இருந்தது. இருப்பினும், பொதுத் துறை நிறுவனங்கள், நுகர் பொருட்கள், உலோகம், ரியல் எஸ்டேட், உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 3.58 புள்ளிகள் அதிகரித்து, 17,134.25 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 17,242.15 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 17,022.09 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 16 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும்,14 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 1.60 புள்ளிகள் உயர்ந்து, 5,190.60 புள்ளிகளில் நிலை கொண் டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,223.05 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,154.30 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|