இந்தியா - அமெரிக்கா 8 பில்லியன் டாலர் ஒப்பந்தம்இந்தியா - அமெரிக்கா 8 பில்லியன் டாலர் ஒப்பந்தம் ... பிளாட்பார கட்டண உயர்வு ஒன்றாம் தேதி முதல் அமல் பிளாட்பார கட்டண உயர்வு ஒன்றாம் தேதி முதல் அமல் ...
டீசல் தட்டுப்பாடு விரைவில் நீங்கும் : இந்தியன் ஆயில் நிறுவனம் தகவல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2012
11:04

சென்னை: "தமிழகத்தில், பெட்ரோல் நிலையங்களில் கடந்த இரண்டு நாட்களாக நிலவும் டீசல் தட்டுப்பாடு விரைவில் சீராகும்' என, இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், கடந்த இரண்டு நாட்களாக, டீசல் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக, சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில், கடுமையான டீசல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சமீபத்தில், கர்நாடகத்தில் மங்களூரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு, தண்ணீர் விநியோகிப்பதற்கு, உள்ளூர் நிர்வாகம் தடை விதித்தது. இதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல், 16ம் தேதி முதல் மங்களூரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டது. இதன் காரணமாக, கர்நாடகம், தமிழகம், கேரளம், ஆந்திரா ஆகிய தென் மாநிலங்களில், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது மங்களூரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் பிரச்னைகளுக்கு, உள்ளூர் நிர்வாகத்திடம், பேச்சு வார்த்தையின் மூலம், தீர்வு காணப்பட்டுள்ளது. இதனால், வரும் மே மாதம் முதல் தேதியில் இருந்து, மீண்டும் மங்களூரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உற்பத்தியைத் துவங்கும். இந்நிலையில், தற்போது நிலவும் டீசல் தட்டுப்பாட்டை நீக்க, இந்தியன் ஆயில் நிறுவனம், சிங்கப்பூரில் இருந்து டீசலை இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் இது, சென்னை வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தமிழகத்தில் நிலவும் டீசல் தட்டுப்பாடு விரைவில் நீங்கும் என இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)