15 நாளில் ரூ. 6 கோடி மதிப்பு பீர் விற்பனை15 நாளில் ரூ. 6 கோடி மதிப்பு பீர் விற்பனை ... இளநீர் விற்பனையில் தமிழகம் முதலிடம்: இளநீர் விற்பனையில் தமிழகம் முதலிடம்: ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
2016க்குள் கூட்டுறவு வங்கிகளை புனரமைக்க ரூ.27.43 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2012
16:23

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க விவசாய கூட்டுறவு கடன் சங்கங்களை அடுத்த 2016ம் ஆண்டிற்குள் ரூ.27.43 கோடியில் புனரமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, அதன் கீழ் 28 கிளைகள் செயல்படுகின்றன. இது தவிர 40க்கும் மேற்பட்ட தொடக்க விவசாய கூட்டுறவு கடன் சங்கங்களும் செயல்படுகின்றன. இந்த சங்கங்கள் நலிவடைந்ததால் மத்திய கூட்டுறவு வங்கி,அதை சார்ந்த கிளைகள் மற்றும் தொடக்க விவசாய கூட்டுறவு கடன் சங்கங்களை மீட்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தேசிய மற்றும் தனியார் வங்கிகளுக்கு இணையாக, கூட்டுறவு வங்கிகளை தரம் உயர்த்த கூட்டுறவுத்துறை முடிவு செய்துள்ளது. ரூ.27.43 கோடி: இதன் ஒரு கட்டமாக மலம்பட்டி, திருப்புத்தூர் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளுக்கு தலா 14 லட்ச ரூபாயில் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. மேலும் சிவகங்கை மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ.30 லட்சத்தில் கம்ப்யூட்டர், ஏ.சி., ஜெனரேட்டர் வசதியுடன் புனரமைப்பு பணிகள் நடக்கிறது.
இந்த வங்கியின் கீழ் உள்ள கிளை வங்கிகள் திறம்பட செயல்பட விவசாய நகை கடன், விவசாயம் சார்ந்த கடன்கள் வழங்கி வணிகத்தை பெருக்க, ஆண்டுக்கு ரூ.1கோடி ஒதுக்கப்படும். வங்கி கிளைகள் 12க்கு புதிய கட்டடம் தலா 14 லட்ச ரூபாயில் கட்டப்படும். படிப்படியாக 2016க்குள் மாவட்டத்தில் உள்ள அனைத்து மத்திய, தொடக்க விவசாய கூட்டுறவு வங்கிகளை புனரமைக்கப்படும். ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சி திட்ட இணைப்பதிவாளர் செந்தமிழ்செல்வி கூறியதாவது: தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகம், தமிழக அரசின் பங்களிப்புடன் நிதி ஒதுக்கப்பட்டு வங்கி கிளைகளை புனரமைக்கும் பணி நடக்கிறது. 2016க்கு பின் இம்மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகள் தன்னிறைவு பெற்ற வங்கிகளாக மாறும்,என்றார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)