பதிவு செய்த நாள்
29 ஏப்2012
00:17
மும்பை:சனிக்கிழமையன்று மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் சிறப்பு வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டது. இதில், பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.பங்கு வர்த்தகத்தை விரைந்து மேற்கொள்ளும் வகையில், புதிய சாப்ட்வேர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை, சோதித்து பார்க்கும் வகையில், மேற்கண்ட இரண்டு பங்கு சந்தைகளிலும், சிறப்பு வர்த்தகம், காலை 11.15 மணி முதல் 12.45 மணி வரையிலுமாக 90 நிமிடத்திற்கு நடைபெற்றது.
இதில், மோட்டார் வாகனம், வங்கி, தகவல் தொழில்நுட்பம், பொறியியல் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு அதிக தேவை இருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 53.09 புள்ளிகள் அதிகரித்து, 17,187.34 புள்ளிகளில் நிலைகொண்டது.
வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 17,212.36 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,125.88 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 25 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 5 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 18.40 புள்ளிகள் உயர்ந்து, 5,209 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,216.40 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,196.35 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|