பதிவு செய்த நாள்
29 ஏப்2012
15:35
திருநெல்வேலி: இந்தியன் ஓவர்சீஸ் பாங்கில் ஆயிரத்து 405வது ஏ.டி.எம்., நெல்லையில் திறந்துவைக்கப்பட்டது. நெல்லை மாவட்டம் மானூரில் இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் கிளை வளாகத்தில் ஏ.டி.எம்., திறக்கப்பட்டது. வங்கியின் பொதுமேலாளர் எஸ்.எச்.கேசவன் திறந்துவைத்தார். நெல்லை மாவட்டத்தில் 23வதும், வங்கியின் ஆயிரத்து 405வது ஏ.டி.எம்.,இதுவாகும். நிகழ்ச்சியில் மண்டல மேலாளர், கிளை மேலாளர் சொக்கலிங்கம், ஏ.டி.எம்.,பிரிவு அதிகாரி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கிளை மேலாளர் சொக்கலிங்கம் கூறுகையில், நெல்லை மாவட்டத்தில் பெண்கள் சுய உதவி குழுக்களுக்கு ஐ.ஓ.பி.,தான் அதிக கடன் வழங்கி வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் கல்வி கடனாக மட்டும் 3 கோடி ரூபாயும், சுயஉதவி குழு கடனாக 2 கோடியே 75 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. முதியவர்கள் பென்சன் பெறுவதற்கான ஸ்மார்ட் கார்டு 2 ஆயிரத்து 380 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என கிளை மேலாளர் சொக்கலிங்கம் தெரிவித்தார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|