பதிவு செய்த நாள்
02 மே2012
00:20
மின் உற்பத்தி திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கி வரும் தமிழ்நாடு பவர் பைனான்ஸ் அண்டு இன்பிராஸ்ட்ரக்Œர் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன், கடன் பத்திரங்களை வெளியிட்டு 6,000 கோடி ரூபாய் திரட்டிக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.கடந்த 1991ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம், பொதுமக்களிடம் இருந்து டெபாசிட்டுகளை திரட்டி, மின் உற்பத்தித் திட்டங்களுக்குத் தேவையான நிதியை தமிழக மின்வாரியத்திற்கு வழங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தில், பள்ளி மாணவர்கள் இடைநிற்றலைத் தடுத்து, ஊக்கப்படுத்தும் வகையில், மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள அரசின் சிறப்புத் திட்ட ஊக்கத் தொகையான, 321 கோடி ரூபாயை பள்ளி கல்வித்துறை டெபாசிட் செய்துள்ளது. கோவில்களில் தடையின்றி ஒரு கால பூஜை நடக்க அரசு ஒதுக்கியுள்ள, 81 கோடியே 81 லட்ச ரூபாயை இந்து சமய அறநிலையத்துறை டெபாசிட் செய்துள்ளது.அதே நேரத்தில், மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திடம் இருந்து வர வேண்டிய நிலுவைத் தொகையின் அளவும் அதிகரித்து வருகிறது. கடந்த 2009-10ம் ஆண்டு 5,361 கோடியாக இருந்த நிலுவைத் தொகை, தற்போது (2011-12) 7,828 கோடியாக உயர்ந்துள்ளது.
மின்வாரியத்தை புனரமைக்க, பெருந்தொகை தேவைப்படுகிறது. இதற்காக, 6,000 கோடி ரூபாய்க்கு கடன் பத்திரங்கள் வெளியிடப்பட உள்ளன. இந்நிறுவனம், சென்ற நிதியாண்டில், டெபாசிட் வாயிலாக, 6,789 கோடியை திரட்டியுள்ளது. கடந்த 2011-12ம் ஆண்டில், மின்வாரியம் காலம் தவறாமல் நிலுவைத் தொகையை செலுத்தியதற்காக, சலுகைத் தொகையாக 30.96 கோடி ரூபாயை திரும்ப அளித்த பிறகும், 73.29 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.- நமது சிறப்பு நிருபர் -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|