இந்துஸ்தான் யூனிலிவர் ரூ.4 டிவிடெண்டு அறிவிப்புஇந்துஸ்தான் யூனிலிவர் ரூ.4 டிவிடெண்டு அறிவிப்பு ... விமான எரிபொருள் விலை கிலோ லிட்டருக்கு ரூ.312 குறைப்பு விமான எரிபொருள் விலை கிலோ லிட்டருக்கு ரூ.312 குறைப்பு ...
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் ரூ.6,000 கோடிக்கு கடன் பத்திர வெளியீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2012
00:20

மின் உற்பத்தி திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கி வரும் தமிழ்நாடு பவர் பைனான்ஸ் அண்டு இன்பிராஸ்ட்ரக்Œர் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன், கடன் பத்திரங்களை வெளியிட்டு 6,000 கோடி ரூபாய் திரட்டிக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.கடந்த 1991ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம், பொதுமக்களிடம் இருந்து டெபாசிட்டுகளை திரட்டி, மின் உற்பத்தித் திட்டங்களுக்குத் தேவையான நிதியை தமிழக மின்வாரியத்திற்கு வழங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தில், பள்ளி மாணவர்கள் இடைநிற்றலைத் தடுத்து, ஊக்கப்படுத்தும் வகையில், மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள அரசின் சிறப்புத் திட்ட ஊக்கத் தொகையான, 321 கோடி ரூபாயை பள்ளி கல்வித்துறை டெபாசிட் செய்துள்ளது. கோவில்களில் தடையின்றி ஒரு கால பூஜை நடக்க அரசு ஒதுக்கியுள்ள, 81 கோடியே 81 லட்ச ரூபாயை இந்து சமய அறநிலையத்துறை டெபாசிட் செய்துள்ளது.அதே நேரத்தில், மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திடம் இருந்து வர வேண்டிய நிலுவைத் தொகையின் அளவும் அதிகரித்து வருகிறது. கடந்த 2009-10ம் ஆண்டு 5,361 கோடியாக இருந்த நிலுவைத் தொகை, தற்போது (2011-12) 7,828 கோடியாக உயர்ந்துள்ளது.
மின்வாரியத்தை புனரமைக்க, பெருந்தொகை தேவைப்படுகிறது. இதற்காக, 6,000 கோடி ரூபாய்க்கு கடன் பத்திரங்கள் வெளியிடப்பட உள்ளன. இந்நிறுவனம், சென்ற நிதியாண்டில், டெபாசிட் வாயிலாக, 6,789 கோடியை திரட்டியுள்ளது. கடந்த 2011-12ம் ஆண்டில், மின்வாரியம் காலம் தவறாமல் நிலுவைத் தொகையை செலுத்தியதற்காக, சலுகைத் தொகையாக 30.96 கோடி ரூபாயை திரும்ப அளித்த பிறகும், 73.29 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.- நமது சிறப்பு நிருபர் -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)