விமான எரிபொருள் விலை கிலோ லிட்டருக்கு ரூ.312 குறைப்புவிமான எரிபொருள் விலை கிலோ லிட்டருக்கு ரூ.312 குறைப்பு ... எண்ணெய் வித்துக்கள் பயிரிடும் பரப்பளவு உயரும் எண்ணெய் வித்துக்கள் பயிரிடும் பரப்பளவு உயரும் ...
கடந்த 2011-12ம் முழு நிதியாண்டில்...நாட்டின் ஏற்றுமதி ரூ.15 லட்சம் கோடியாக அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2012
00:22

புதுடில்லி:சென்ற 2011-12ம் முழு நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி, 30 ஆயிரத்து 370 கோடி டாலராக (15 லட்சத்து 18 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.மார்ச் மாதத்தில்...அதே சமயம், சென்ற மார்ச் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி, 5.7 சதவீதம் என்ற குறைந்த அளவில், வளர்ச்சிகண்டு, 2,870 கோடி டாலராக (1 லட்சத்து 43 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) குறைந்துள்ளது.இதே மாதங்களில், இறக்குமதி, 24.3 சதவீதம் அதிகரித்து, 4,260 கோடி டாலராக (2 லட்சத்து 13 ஆயிரம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில், ஏற்றுமதியைக் காட்டிலும், இறக்குமதி அதிகரித்துள்ளதால், வர்த்தக பற்றாக்குறை, 1,390 கோடி டாலராக (69 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.மதிப்பீட்டு மாதங்களில்ல், கச்சா எண்ணெய் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி, 32.2 சதவீதம் அதிகரித்து, 1,580 கோடி டாலராக (79 ஆயிரம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. எண்ணெய் சாராத இதர பொருட்களின் இறக்குமதி, 19.91 சதவீதம் உயர்ந்து, 2,675 கோடி டாலராக (1 லட்சத்து 33 ஆயிரத்து 750 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.
ஏற்றுமதி இலக்குசென்ற முழு நிதியாண்டில், 30 ஆயிரம் கோடி டாலர் (15 லட்சம் கோடி ரூபாய்), மதிப்பிற்கு ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ஏற்றுமதி, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட, 30 ஆயிரத்து 370 கோடி டாலராக (15 லட்சத்து 18 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில் (2010-11), மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 21 சதவீதம் அதிகமாகும்.
இதே நிதியாண்டுகளில், இறக்குமதி, 32.2 சதவீதம் அதிகரித்து, 48 ஆயிரத்து 860 கோடி டாலராக (24 லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. ஏற்றுமதியை காட்டிலும், இறக்குமதி அதிகரித்துள்ளதால், வர்த்தக பற்றாக்குறை, 18 ஆயிரத்து 490 கோடி டாலராக (9 லட்சத்து 24 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.கணக்கீட்டு காலத்தில், எண்ணெய் இறக்குமதி, 46.88 சதவீதம் அதிகரித்து, 15 ஆயிரத்து 563 கோடி டாலராக (7 லட்சத்து 78 ஆயிரத்து 150 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. எண்ணெய் சாராத இதர பொருட்களின் இறக்குமதி, 26.23 சதவீதம் உயர்ந்து, 26 ஆயிரத்து 380 கோடி டாலராக (13 லட்சத்து 19 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.
அமெரிக்கா:இந்திய பொருட்களுக்கு, முக்கிய சந்தைகளாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளன. சர்வதேச பொருளாதார மந்த நிலையால், உலகின் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், சென்ற முழு நிதியாண்டில், இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சி, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட, 20 சதவீதம் வளர்ச்சிகண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, நடப்பு கணக்கு பற்றாக்குறை மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவு நிலை போன்றவை, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சவலாக உள்ளன என, அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)