எண்ணெய் வித்துக்கள் பயிரிடும் பரப்பளவு உயரும்எண்ணெய் வித்துக்கள் பயிரிடும் பரப்பளவு உயரும் ... மகளிர் குழு கண்காட்சி 10 நாளில் ரூ.11 லட்சத்துக்கு விற்பனை மகளிர் குழு கண்காட்சி 10 நாளில் ரூ.11 லட்சத்துக்கு விற்பனை ...
டிஜிட்டல்மயமாகிறது கேபிள் டிவி : 100 ரூபாய்க்கு 100 சேனல்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2012
09:38

புதுடில்லி :கேபிள் "டிவி' ஜூலை முதல் தேதியிலிருந்து டிஜிட்டல் மயமாகிறது. இதன் மூலம், நூறு ரூபாய்க்கு நூறு சேனல்களைப் பார்க்கும் வசதி கிடைக்கிறது. இந்தியா முழுவதும் கேபிள் "டிவி'க்களை டிஜிட்டல் மயமாக்க, மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) உத்தரவிட்டது. இதையடுத்து, பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடரில், இதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. தற்போது இந்தியாவில், 800க்கும் மேற்பட்ட சேனல்கள் உள்ளன. இருப்பினும், கேபிள் ஆபரேட்டர்கள் தங்களுக்கு எந்த சேனல்களை வழங்க விருப்பமோ, அதை மட்டுமே வழங்குகின்றனர். இந்த நிலை மாற இருக்கிறது.
துல்லியம்:டிஜிட்டல் மயமாவதன் மூலம், "டிவி' நேயர்களுக்கு அதிக பலன் கிடைக்க உள்ளது. மேலும், டிஜிட்டல் முறையில் ஒளிபரப்பு நடைபெற இருப்பதால், சேனல்களை மிகத் துல்லியமாகப் பார்க்க முடியும். மேலும் அதிக சேனல்களைப் பார்க்கும் வசதி கிடைக்கும். "டிராய்' உத்தரவுப்படி நூறு ரூபாய்க்கு நூறு சேனல்களைப் பார்க்க முடியும். இதில், நேயர்கள் தாங்கள் விரும்பிய சேனல்களை மட்டுமே பார்க்க முடியும். இந்த முறை, வரும் ஜூலை முதல் தேதியிலிருந்து சென்னை, டில்லி, கோல்கட்டா, மும்பை ஆகிய நான்கு பெருநகரங்களில் மட்டும் அறிமுகமாகிறது. இதன்பின் 2015ம் ஆண்டு ஜனவரி முதல் நாடு முழுவதும் அறிமுகமாகிறது.
கட்டாயமில்லை:நூறு ரூபாய்க்கு இலவச சேனல்கள் மட்டுமல்லாது, தங்களுக்கு விருப்பமான கட்டணச் சேனல்களை ஒன்றோ, இரண்டோ அதைத் தேர்வு செய்து, அதற்குரிய கட்டணத்தைச் செலுத்தி பார்க்கலாம். ஒரு கட்டணச் சேனலுக்காக, அந்த குழுமத்திலுள்ள மற்ற கட்டணச் சேனல்களை கட்டாயம் பார்க்க வேண்டிய அவசியமில்லை .இந்த புதிய திட்டம் குறித்து சேனல்களின் ஒளிபரப்பாளர்கள் 30 நாட்களுக்குள் பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இலவச சேனல்கள், கட்டணச் சேனல்கள் உட்பட அனைத்து தகவல்களையும் தெளிவுபடுத்த வேண்டும். செட் ஆப் பாக்ஸ் கட்டணம், உத்தரவாத தொகை ஆகியவற்றைத் தெளிவுபடுத்த வேண்டும். இந்த டிஜிட்டல் முறை மூலம், ஒவ்வொரு வீட்டிலும் பொருத்தப்படும் செட் ஆப் பாக்ஸ் மூலம், எந்தெந்த சேனல்களை பார்க்கிறார்கள் என்பதை துல்லியமாகத் தெரிந்து கொள்ள முடியும்.
துவக்கம்:சென்னையிலுள்ள கேபிள் ஆபரேட்டர்கள், டிஜிட்டல் மயமாக்குவதற்கான பணியைத் துவக்கிவிட்டனர். தற்போது ஒவ்வொரு வீட்டிலும் கேபிள் மற்றும் செட் ஆப் பாக்ஸ் மூலம் கேபிள் "டிவி' பார்த்து வருபவர்கள், கண்டிப்பாக புதிதாக டிஜிட்டல் ஒளிபரப்புக்கு என்று செட் ஆப் பாக்ஸ் வாங்கியே ஆக வேண்டும். இது இல்லாமல் பார்க்க முடியாது. ஒளிபரப்பை மிகத் துல்லியமாகப் பார்க்க முடியும். நூறு இலவச சேனல்கள் மற்றும் தங்களுக்கு விருப்பமான கட்டணச் சேனல்களை எல்லாம் சேர்த்தால் கூட மாத சந்தா 150 ரூபாய்க்கு மேல் செல்ல வாய்ப்பு இல்லை.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)