பதிவு செய்த நாள்
02 மே2012
10:09
சென்னை : மகளிர் சுய உதவிக்குழு தயாரித்த பொருட்கள் கண்காட்சியில் 10 நாட்களில், 11 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் விற்பனையாகியுள்ளன.
கண்காட்சியில், 32 மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழுவினர், உற்பத்தி செய்த பொருட்கள் விற்பனைக்கு காட்சியாக்குகின்றனர். முதல் கட்டமாக, சென்னை, திண்டுக்கல், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கரூர், மதுரை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சேலம், திருநெல்வேலி, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த குழுக்கள், கடந்த 20 முதல் 29ம் தேதி வரை, தங்கள் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்தனர். 29ம் தேதியோடு முடிவடைந்த இக்கண்காட்சியில், 10 நாட்களில், 11 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள உற்பத்திப் பொருட்கள் விற்பனையாகியுள்ளன.
இரண்டாவது கட்டமாக, கோயம்புத்தூர், கடலூர், கன்னியாகுமரி, பெரம்பலூர், தேனி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சிவகங்கை, திருவாரூர், தூத்துக்குடி மற்றும் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த குழுக்கள், கடந்த 30ம் தேதி முதல் வரும் 10ம் தேதி வரை உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய உள்ளனர். மூன்றாவது கட்டமாக, அரியலூர், தர்மபுரி, ஈரோடு, உதகை, தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம், திருவள்ளூர், வேலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த குழுவினர், உற்பத்திப் பொருட்களை, வரும் 11ம் தேதி முதல் 20ம் தேதி வரை விற்பனை செய்ய உள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|