பதிவு செய்த நாள்
02 மே2012
10:22
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 105 புள்ளிகள் அதிகரித்து 17423.81 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 30.40 புள்ளிகள் அதிகரித்து 5278.55 புள்ளிகளோடு காணப் பட்டது. நேற்று மே 1ம் தேதி பங்குச்சந்தைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் பங்கு வர்த்தகம் ஏதுவும் நடைபெற வில்லை. கடந்த திங்கள்கிழமையன்று நடைபெற்ற வர்த்தகம் நன்கு இருந்தது. வர்த்தகம் முடிவின் போது ஏற்றத்துடன் முடிந்திருந்தது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 131.47 புள்ளிகள் அதிகரித்து 17318.81 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 39.15 புள்ளிகள் அதிகரித்து 5248.15 புள்ளிகளோடு காணப் பட்டது
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|