பதிவு செய்த நாள்
02 மே2012
15:49
புதுடில்லி: டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை ஆகியவற்றினால் எண்ணெய் நிறுவனங்களுக்கு தினமும் ரூ. 528 கோடி இழப்பீடு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அரசு வெளியிட்டுள்ள செய்தியி்ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் வரும் மே மாதம் முதல்வாரத்தில் டீசல் விற்பனையால் தினமும் ரூ. 13.91 பைசாவும், சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றிற்கு தினமும் ரூ.480.50 பைசாவும் , கெரசின் லிட்டர் ஒன்றிற்கு ரூ.31.49 பைசாவும் என மொத்தம் ரூ.518 கோடி இழப்பீடு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டள்ளது. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீட்டை சரிகட்ட நிதி அமைச்சர் பிரணாப் தலைமையில் விரைவில் மத்திய அமைச்சரவைக்கூட்டம் இம்மாதத்திற்குள் கூடி முடிவு எடுக்க உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|