பதிவு செய்த நாள்
02 மே2012
23:56
சென்னை: பொதுத் துறையைச் சேர்ந்த, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம், பொதுக் காப்பீட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், நடப்பு 2012-13ம் நிதியாண்டில், பிரிமிய வருவாய் வாயிலாக, 10 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.இதுகுறித்து, இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஜி.ஸ்ரீனிவாசன் கூறியதாவது:சென்ற நிதியாண்டில் (2011-12), நிறுவனத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தன. நிறுவனம், சென்ற நிதியாண்டில், 387 கோடி ரூபாயை வரிக்கு பிந்தைய லாபமாக ஈட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 130.54 கோடி ரூபாயாக இருந்தது.இதே நிதியாண்டுகளில், நிறுவனத்தின் மொத்த பிரிமிய வருவாய், 6,377 கோடியிலிருந்து, 8,179 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நிகர பிரிமிய வருவாய், 32 சதவீதம் வளர்ச்சியடைந்து, 5,117 கோடியிலிருந்து, 6,780 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. பொது காப்பீட்டு வர்த்தகத்தில், நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு, 14.93 சதவீதம் என்றளவில் உள்ளது.நிறுவனம், தமிழகத்தில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதுவரை, இத்திட்டத்தில் இழப்பீடு கோரி, 41 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவற்றில், 155 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. நிறுவனம், சென்ற நிதியாண்டிற்கு, 52 சதவீத டிவிடெண்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஸ்ரீனிவாசன் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|