பதிவு செய்த நாள்
02 மே2012
23:57
சென்னை: இந்தியாவில், மின்னணு மற்றும் வீட்டு பயன்பாட்டு சாதனங்களின் வர்த்தக மதிப்பு, வரும், 2015ம் ஆண்டில், 52 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும் என, "அசோசெம்' மதிப்பிட்டுள்ளது. இச்சந்தையின் ஆண்டு மதிப்பு, தற்போது, 34 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.ஆண்டு வளர்ச்சிஇந்நிலையில், சர்வதேச அளவில், மின்னணு மற்றும் வீட்டு பயன்பாட்டு சாதனங்கள் துறை, 10 சதவீத அளவிலான ஆண்டு வளர்ச்சியுடன் 16 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது, வரும் 2015ம் ஆண்டில் 21 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.இந்தியாவை பொறுத்தவரை, பன்னாட்டு நிறுவனங்கள், மேம்பட்ட தொழில்நுட்பத்தில், தரமான மின்னணு மற்றும் வீட்டு உபயோக சாதனங்களை வழங்கி, 70 சதவீத சந்தைப் பங்களிப்பை பெற்றுள்ளன.குறிப்பாக, இந்நிறுவனங்கள், நகர்புற நடுத்தர மக்களிடையே, 12-15 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளன.பன்னாட்டு நிறுவனங்களின் மின்னணு மற்றும் வீட்டு பயன்பாட்டு சாதனங்கள், நகர்புற நடுத்தர வருவாய் பிரிவில், 12-15 சதவீதம் என்றளவில் வளர்ச்சி கண்டு வருகின்றன. இந்த வளர்ச்சி, கிராமப்புறம் மற்றும் சிறு நகரங்களில், 40 சதவீதமாகவும், ஒட்டுமொத்த வளர்ச்சி, ஆண்டுக்கு 30 சதவீதம் என்ற அளவிலும் உள்ளது.இந்தியாவில், நுகர்வோர் மின்னணு மற்றும் வீட்டு பயன்பாட்டு சாதனங்கள், வெள்ளை, பழுப்பு மற்றும் நுகர்வோர் மின்னணு சாதனங்கள் என, மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில், வெள்ளை சாதனங்கள் பிரிவின் கீழ் "ஏசி', ரெப்ரிஜெரேட்டர், வாஷிங் மிஷின் உள்ளிட்ட இதர சாதனங்கள் இடம் பெற்றுள்ளன. மைக்ரோவேவ், சிம்னி, மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் உள்ளட்டவை பழுப்பு சாதனங்கள் பிரிவின் கீழ் வருகின்றன. "டிவி' ஆடியோ, வீடியோ பிளேயர், மொபைல் போன், பெர்சனல் கம்ப்யூட்டர், லேப்-டாப், மொபைல் போன், டிஜிட்டல் கேமரா, கேம் கார்டு உள்ளிட்ட இதர மின்னணு சாதனங்கள், நுகர்வோர் மின்னணு சாதனங்கள் பிரிவின் கீழ் அடங்கும்.புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் பெருகி வருவதும், எல்.ஈ.டீ., எல்.சி.டி., தொலைகாட்சிகளுக்கான தட்டையான திரைகளுக்கு, மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதும், இத்துறையின் வளர்ச்சிக்கு உந்துகோலாக உள்ளன.öŒலவிடும் வருவாய்.மேலும், இளைய சமூகத்தின் மக்கள் தொகை அதிகரித்து வருவது, செலவிடும் வருவாய் உயர்ந்துள்ளது, கல்வி கற்ற தொழில் வல்லுனர்களின் எண்ணிக்கை பெருகி வருவது உள்ளிட்ட காரணங்களால், நுகர்வோர் சாதனங்களுக்கான தேவை உயர்ந்து வருகிறது என, அசோசெம் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|