மின்னணு சாதனங்கள் வணிகம் ரூ.52,000 கோடியாக உயரும் மின்னணு சாதனங்கள் வணிகம் ரூ.52,000 கோடியாக உயரும் ... இயற்கை ரப்பர் உற்பத்தி 4.3 சதவீதம் உயர்வு இயற்கை ரப்பர் உற்பத்தி 4.3 சதவீதம் உயர்வு ...
கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையிலும்... வளர்ச்சி பாதையில் ரயில்வே சரக்கு போக்குவரத்து
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2012
23:59

புதுடில்லி: ரயில்வே சரக்கு கட்டணம் அதிகரிக்கப்பட்ட போதிலும், நிலக்கரி, உரம் மற்றும் உணவுதானியங்களை சரக்கு ரயில்களில் கொண்டு செல்வது அதிகரித்துள்ளது. எனினும், ரயில் மூலம் சிமென்ட் கொண்டு செல்வது குறைந்துள்ளது.இரும்பு தாதுஇந்திய ரயில்வே, சென்ற மார்ச் 6ம் தேதி, சரக்கு போக்குவரத்து கட்டணங்களை, 20 சதவீதம் முதல் 28 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இருந்தபோதிலும், ஏற்றுமதிக்காக ரயிலில் கொண்டு செல்லப்படும் இரும்புத் தாதுவிற்கு,இந்த கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.சரக்கு கட்டணம் உயர்த்தப்பட்டதால், ரயில்வே துறை கையாளும் சரக்கு, அளவின் அடிப்படையில் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதற்கு நேர்மாறாக, ரயில்களில் விளைபொருட்களை கொண்டு செல்வது அதிகரித்துள்ளது.சென்ற மார்ச் மாதம், ரயில்வே துறை, சரக்குகளை கையாண்டதில் 5.64 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. இது,சென்ற 2011-12ம் முழு நிதியாண்டிற்கான 5.24 சதவீத சராசரி வளர்ச்சியை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.அது போன்று, சென்ற மார்ச் மாதத்தில் கையாண்ட சரக்கின் நிகர எடை மற்றும் சரக்கு கொண்டு செல்லப்படும் தூரத்தின் அடிப்படையிலான வளர்ச்சி, 6.36 சதவீதமாக உள்ளது. இது, ஆண்டு வளர்ச்சி விகிதத்தை விட அதிகமாகும்.சரக்கு கட்டண அதிகரிப்பால், ரயில்வேயின் வருவாய் அதிகரித்துள்ளது. சென்ற மார்ச் நிலவரப்படி, ஒரு டன் சரக்கை, ஒரு கிலோ மீட்டர் தூரம் கொண்டு செல்வதற்கான ரயில்வேயின் வருவாய் 17 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சி, சென்ற ஆண்டு மார்ச் மாதம் 4.85 சதவீதம் என்ற அளவில் குறைந்து காணப்பட்டது.
நிலக்கரிசென்ற மார்ச் மாதம், ரயில்வே துறை நிலக்கரியை கையாண்டதில், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை விட 10.33 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. இது, சரக்கு கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையிலும், சரக்கு போக்குவரத்து குறைவின்றி வளர்ந்து வருவதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.சென்ற மார்ச் மாதம், நிலக்கரியை பொறுத்தவரை, ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு டன் சரக்கு போக்குவரத்து என்ற அடிப்படையிலான வருவாய் வளர்ச்சி, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை விட 9.83 சதவீதம் அதிகரித்துள்ளது.ரயில்வே துறை, சென்ற மார்ச் மாதம், உருக்கு நிறுவனங்களுக்கு இரும்புத் தாது நீங்கலாக, இதர மூலப் பொருள்களை கையாண்டதில் 30.89 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. இதே காலத்தில், சரக்கு மற்றும் தொலைவு அடிப்படையிலான வருவாய் வளர்ச்சி 24 சதவீதம் என்றளவில் உயர்ந்துள்ளது.இதே மாதங்களில், உருக்காலைகளில் இருந்து மென்னிரும்பு மற்றும் உற்பத்தியான உருக்கு பொருள்களை கொண்டு சென்ற வகையில், ரயில்வே துறை 8.86 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. இதே காலத்தில், சரக்கு மற்றும் தொலைவு அடிப்படையிலான வருவாய் வளர்ச்சி 13.95 சதவீதமாக அதிகரித்துள்ளது.சென்ற மார்ச் மாதம், ரயில்வே துறை, சிமென்ட் கையாண்டதில், மிகக் குறைவாக 0.19 சதவீதம் என்ற அளவிற்கே வளர்ச்சி கண்டுள்ளது. சரக்கின் நிகர எடை மற்றும் தொலைவு அடிப்படையிலான வருவாய், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை விட, சென்ற மார்ச் மாதம் மைனஸ் 1.61 சதவீதமாக குறைந்துள்ளது.சிமென்ட்அதாவது, ரயில் சரக்கு கட்டண உயர்வால், சிமென்ட் கையாள்வது குறைந்துள்ளது. சிமென்ட் நிறுவனங்கள், குறைந்த தூரத்திற்கே சரக்குகளை அனுப்ப ரயில்களை பயன்படுத்திக் கொண்டுள்ளன. இதனால், ரயில்வேக்கு இப்பிரிவு வாயிலான வருவாய் சரிவடைந்துள்ளது.ரயில்வேயின் சரக்கு போக்குவரத்து வாயிலான வருவாயில், சிமென்ட் 10 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.உணவு தானியங்கள்இதே காலத்தில், ரயில்வே துறை, உணவு தானியங்களை கையாண்டதில் 2.84 சதவீத வளர்ச்சியும், எடை மற்றும் தொலைவு அடிப்படையிலான வருவாயில் 8.06 சதவீத வளர்ச்சியும் கண்டுள்ளது.இதே காலத்தில், உரங்களை கையாண்டதில் 46 சதவீத வளர்ச்சியும், எடை மற்றும் தொலைவு அடிப்படையிலான வருவாயில் 59 சதவீத வளர்ச்சியும் எட்டப்பட்டுள்ளது. ரயில்வே துறை, சென்ற மார்ச் மாதம், சரக்கு பெட்டகங்களை கையாண்டதில் 11 சதவீதமும், வருவாயில்(எடை மற்றும் தொலைவு) 13 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளது.இதர சரக்கை கையாண்டதில் மைனஸ் 0.49 சதவீதமும், வருவாயில் (எடை மற்றும் தொலைவு) மைனஸ் 1.76 சதவீத வளர்ச்சியையும் ரயில்வே துறை கண்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)