கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையிலும்... வளர்ச்சி பாதையில் ரயில்வே சரக்கு போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையிலும்... வளர்ச்சி பாதையில் ரயில்வே சரக்கு ... ... சர்க்கரை உற்பத்தி 2.51 கோடி டன்னை எட்டியது சர்க்கரை உற்பத்தி 2.51 கோடி டன்னை எட்டியது ...
இயற்கை ரப்பர் உற்பத்தி 4.3 சதவீதம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2012
00:00

கொச்சி: சென்ற 2011-12ம் முழு நிதியாண்டில், நாட்டின் இயற்கை ரப்பர் உற்பத்தி, 4.3 சதவீதம் அதிகரித்துள்ளது என, ரப்பர் வாரியம் தெரிவித்துள்ளது.இந்தியாஉலகளவில், இயற்கை ரப்பர் உற்பத்தியில், இந்தியாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. சர்வதேச பொருளாதார நெருக்கடியால், பல நாடுகளில், ரப்பர் தொழில் அதிக பாதிப்பை சந்தித்தது. அண்மை காலமாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், இந்த பாதிப்பிலிருந்து மீளத் துவங்கியுள்ளன.சென்ற நிதியாண்டில், நாட்டின் ரப்பர் உற்பத்தி, 8 லட்சத்து 99 ஆயிரத்து 400 டன்னாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 4.3 சதவீதம் அதிகமாகும்.இதே நிதியாண்டுகளில், ரப்பர் பயன்பாடு, 9 லட்சத்து 66 ஆயிரத்து 750 டன்னாகவும், இறக்குமதி, 2 லட்சத்து 5 ஆயிரத்து 433 டன்னாகவும், ஏற்றுமதி, 27 ஆயிரத்து 145 டன்னாகவும் உயர்ந்துள்ளது. மார்ச் இறுதி நிலவரப்படி ரப்பர் கையிருப்பு, 2 லட்சத்து 30 ஆயிரம் டன்னாக உள்ளது.மதிப்பீட்டு காலத்தில், உள்நாட்டில், டயர் துறைக்கான ரப்பர் பயன்பாடு, 6.3 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம், இதர துறைகளுக்கான ரப்பர் பயன்பாடு, 5.4 சதவீதம் குறைந்துள்ளது.நடப்பு 2012-13ம் நிதியாண்டில், இயற்கை ரப்பர் உற்பத்தி மற்றும் பயன்பாடு முறையே, 9 லட்சத்து 42 ஆயிரம் டன் மற்றும் 10 லட்சத்து 6 ஆயிரம் டன்னாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆக, பற்றாக்குறை, 64 ஆயிரம் டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.கையிருப்புநடப்பு ஏப்ரல் மாதம் தொடக்கத்தில், இயற்கை ரப்பர் கையிருப்பு 2 லட்சத்து 30 ஆயிரம் டன் என்ற அளவில் உள்ளது. மேலும், சுங்க வரியின்றி 1 லட்சத்து 20 ஆயிரம் டன் இயற்கை ரப்பர் இறக்குமதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், உள்நாட்டில், இயற்கை ரப்பருக்கு தட்டுப்பாடு இருக்காது என ரப்பர் வாரியம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)