பதிவு செய்த நாள்
03 மே2012
00:00
கொச்சி: சென்ற 2011-12ம் முழு நிதியாண்டில், நாட்டின் இயற்கை ரப்பர் உற்பத்தி, 4.3 சதவீதம் அதிகரித்துள்ளது என, ரப்பர் வாரியம் தெரிவித்துள்ளது.இந்தியாஉலகளவில், இயற்கை ரப்பர் உற்பத்தியில், இந்தியாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. சர்வதேச பொருளாதார நெருக்கடியால், பல நாடுகளில், ரப்பர் தொழில் அதிக பாதிப்பை சந்தித்தது. அண்மை காலமாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், இந்த பாதிப்பிலிருந்து மீளத் துவங்கியுள்ளன.சென்ற நிதியாண்டில், நாட்டின் ரப்பர் உற்பத்தி, 8 லட்சத்து 99 ஆயிரத்து 400 டன்னாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 4.3 சதவீதம் அதிகமாகும்.இதே நிதியாண்டுகளில், ரப்பர் பயன்பாடு, 9 லட்சத்து 66 ஆயிரத்து 750 டன்னாகவும், இறக்குமதி, 2 லட்சத்து 5 ஆயிரத்து 433 டன்னாகவும், ஏற்றுமதி, 27 ஆயிரத்து 145 டன்னாகவும் உயர்ந்துள்ளது. மார்ச் இறுதி நிலவரப்படி ரப்பர் கையிருப்பு, 2 லட்சத்து 30 ஆயிரம் டன்னாக உள்ளது.மதிப்பீட்டு காலத்தில், உள்நாட்டில், டயர் துறைக்கான ரப்பர் பயன்பாடு, 6.3 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம், இதர துறைகளுக்கான ரப்பர் பயன்பாடு, 5.4 சதவீதம் குறைந்துள்ளது.நடப்பு 2012-13ம் நிதியாண்டில், இயற்கை ரப்பர் உற்பத்தி மற்றும் பயன்பாடு முறையே, 9 லட்சத்து 42 ஆயிரம் டன் மற்றும் 10 லட்சத்து 6 ஆயிரம் டன்னாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆக, பற்றாக்குறை, 64 ஆயிரம் டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.கையிருப்புநடப்பு ஏப்ரல் மாதம் தொடக்கத்தில், இயற்கை ரப்பர் கையிருப்பு 2 லட்சத்து 30 ஆயிரம் டன் என்ற அளவில் உள்ளது. மேலும், சுங்க வரியின்றி 1 லட்சத்து 20 ஆயிரம் டன் இயற்கை ரப்பர் இறக்குமதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், உள்நாட்டில், இயற்கை ரப்பருக்கு தட்டுப்பாடு இருக்காது என ரப்பர் வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|